News November 30, 2024
மக்களை காக்கவே கரண்ட் கட்: SB விளக்கம்

மக்கள் பாதுகாப்புக்காகவே சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்துள்ளது என்றார். மேலும், பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்ய 10,000 பேர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News April 28, 2025
போர் பதற்றம்… கூடும் நாடாளுமன்ற நிலைக்குழு

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே <<16241905>>பதற்றம் <<>>நீடித்து வருகிறது. இதனிடையே பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று மாலை கூடுகிறது. இதில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
News April 28, 2025
கேரளாவில் பதற்றம்… வெடிகுண்டு மிரட்டல்

கேரளாவில் தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், போக்குவரத்துறை ஆணையர் அலுவலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். மே 2-ம் தேதி PM மோடி கேரளா செல்ல உள்ள நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
News April 28, 2025
PM மோடியை விமர்சித்த பாடகி மீது வழக்குப்பதிவு

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் PM மோடியை விமர்சித்த போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘மோடி இப்போது பீகாரில் பஹல்காம் தாக்குதலின் பெயரில் வாக்கு சேகரிப்பார்’ என்று நேஹா கூறியிருந்தார். இந்த வீடியோ பாக். பத்திரிகையாளர்கள் குழு நடத்தும் X ஹேண்டில் வெளியானதை அடுத்து, தேசிய ஒருமைப்பாட்டை குலைப்பதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.