News March 18, 2024
கடலூர்: போஸ்டர்கள் அகற்றும் பணி

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று கடலூர் மஞ்சக்குப்பம், பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் பணி நடந்தது. அதேபோல் துணை தாசில்தார் ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், கடலூர் மஞ்சக்குப்பம் ரவுண்டானா அருகே வாகன சோதனை நடத்தினர்.
Similar News
News August 10, 2025
கடலூர்: ரத்தசோகை பரிசோதனை செய்ய 71 குழுக்கள்

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இரத்தசோகை பரிசோதனைக்காக மருத்துவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், கிராமப்புற மருத்துவ அலுவலர், மருந்தாளர் ஆகிய 6 நபர்களை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் மொத்தம் 71 குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒரு குழுவின் மூலம் ஒரு வாரத்திற்கு 300 நபர்களை பரிசோதித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
கடலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

கடலூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
✅பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
கடலூர் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், திமுக கடலூர் மாவட்ட செயலாளர் மற்றும் திமுக மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் காணொளி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.