News September 13, 2024
கடலூரில் குரூப்-2 தேர்வு: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (14-ம் தேதி) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூட ஹால் டிக்கெட் உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் வரவேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 30, 2025
கடலூர்: வேன் மோதி முதியவர் துடிதுடித்து பலி

பரங்கிப்பேட்டை அருகே அரியகோஷ்டி மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (70). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வேன் ஒன்று குமரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 30, 2025
கடலூரில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எஸ்பி தகவல்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 307 குட்கா போதைப்பொருட்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 403 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6,224 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று(டிச.29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
கடலூர்: அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்

கடலூர் மாவட்டம், கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள மறைக்காயர் குளத்தில், 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சடலத்தை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


