News September 13, 2024
கடலூரில் குரூப்-2 தேர்வு: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (14-ம் தேதி) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூட ஹால் டிக்கெட் உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் வரவேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 29, 2025
கடலூரில் உள்ள ஒரே குபேரர் கோயில்!

கடலூர் அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தில் குபேரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் சிலை சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதும், கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரே குபேரன் கோயில் இது மட்டுமே என்பதும் சிறப்பம்சமாகும். இக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் பணக்கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம். பணக்கஷடம் நீங்க இதனை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்!
News December 29, 2025
கடலூர்: 161 பேருக்கு ரூ.2.57 கோடி தீருதவித்தொகை

கடலூர் மாவட்டத்தில் 7 காவல் உட்கோட்டங்களில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சிக்கு அனுப்பிய அறிக்கையின் மூலம் கடந்த ஆண்டு 106 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 91 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 161 பேருக்கு ரூ.2.57 கோடி தீருதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 15 நபர்களுக்கான தொகை வழங்க உள்ளன என்று மனித உரிமை போலீசார் தெரிவித்துள்ளனர்.
News December 29, 2025
கடலூர்: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


