News September 13, 2024
கடலூரில் குரூப்-2 தேர்வு: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (14-ம் தேதி) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூட ஹால் டிக்கெட் உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் வரவேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 31, 2025
கடலூர்: அனைத்து காவல் அதிகாரிகளும் இரவு ரோந்து பணி

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (31/12/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
கடலூர் சில்வர் பீச்சில் குளிக்க தடை

ஆங்கில புத்தாண்டு நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் சில்வர் பீச்சில் பொழுதை கழிக்க செல்வார்கள். இதனால் மேலும் கடற்கரையில் குளிக்கும் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சில்வர் பீச்சில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் கடற்கரையில் தடுப்பு கட்டை அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
News December 31, 2025
கடலூரில் 2,86,662 விவசாயிகள் பயன்

கடலூர் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,86,662 விவசாயிகள் பல்வேறு வேளாண் திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளனர். இதில் குறிப்பாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு, வேளாண் தொழில் முனைவோர் ஆக்கத் திட்டம், நீர்வள நிலவள திட்டத்தில் பயனடைந்துள்ளதாக மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


