News March 17, 2024
கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், அரசு கட்டிடங்களில் எந்த வகையான அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் செய்யக்கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் தேர்தல் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Similar News
News January 17, 2026
கடலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News January 17, 2026
கடலூர்: 3 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள்

நடுவீரப்பட்டு போலீஸ் எஸ்.ஐ. ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று நரியங்குப்பம் ஓடை அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பத்தை சேர்ந்த சபாபதி மகன் நவீன் (25), கடலூர் ராணிப்பேட்டையை சேர்ந்த செல்வம் மகன் அருண்குமார் (18), நரியங் குப்பத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சசிகுமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.
News January 17, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


