News September 28, 2024

கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News January 15, 2026

ஏல சீட்டு நடத்தி மோசடி செய்த ஒருவர் கைது

image

பெரியகுமட்டியை சேர்ந்த அசோகன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் ஏல சீட்டு நடத்துவதாக கூறி கடலூர் பகுதி சேர்ந்த பலரிடம் சீட்டு பிடித்து சீட்டு முடிந்த பிறகும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். கிருபாகரன், சிவராமகிருஷ்ணன், திருஞான செல்வம், செல்வராஜ் ஆகியோர் கடலூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரில் ரூ.13,98,912 ஏல சீட்டு பணத்தை ஏமாற்றிய அசோகன் (43) என்பவரை இன்று கைது செய்தனர்.

News January 15, 2026

கடலூர்: சாதிச்சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி ஆகிய வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற ஜன. 20 முதல் 23 வரை நடைபெறும்.

News January 15, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.14) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.15) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!