News September 28, 2024
கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 17, 2025
கடலூர்: டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!

இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்பட்சம் 40
4. சம்பளம்: ரூ.16,338 – ரூ.29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
கடலூர் மாவட்டத்தில் பரவும் போலி புகைப்படம்!

காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரியில், பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனேல் மெஸ்சி பார்வையிடுவது போல நேற்று கடலூர் மாவட்ட சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவியது. இந்நிலையில் இப்புகைப்படம் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 17, 2025
கடலூர்: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


