News September 28, 2024
கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 28, 2025
கடலூர்: சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் மீது வழக்கு

சிதம்பரம் அருகே சிலம்பிமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (35). திருமணமான இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் வழக்கு பதிந்து, செந்தமிழ் செல்வனை தேடி வருகின்றனர்.
News December 28, 2025
கடலூர்: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
8. வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
கடலூர்: லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

பாச்சார பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரசாயி (48). இவர் நேற்று சண்முகம் என்பருடன் டூவீலரில் கன்னி தமிழ்நாடு பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதியதில் அரசாயி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சண்முகம் காயங்களுடன் உயர் தப்பினார். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வடலூர் போலீசார் தேடி வருகின்றனர்.


