News September 28, 2024

கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News December 5, 2025

கடலூர்: BE /B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, Diploma
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 5, 2025

கடலூர் மாவட்டம் முழுவதும் 126.1 மில்லி மீட்டர் மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 5) காலை 8.30 மணி நிலவரப்படி பெலாந்துறை 37.8 மில்லி மீட்டர், வேப்பூர் 13.5 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 11.2 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 10 மில்லி மீட்டர், லக்கூர் 9.1 மில்லி மீட்டர், பண்ருட்டி 9 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 126.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News December 5, 2025

கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ?

image

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் இதுவரை நடந்த கணக்கெடுப்பில் இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு, ஊரில் வசிக்காமை போன்ற காரணங்களுக்காக 2,62,650 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் வரும் 11-ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!