News September 28, 2024
கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 28, 2025
கடலூர்: லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? Don’t Worry!

கடலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே<
News December 28, 2025
கடலூர்: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 28, 2025
கடலூர்: டூவீலர் – கார் மோதி பயங்கர விபத்து

வேப்பூர் அருகே உள்ள மா.புத்தூரை சேர்ந்தவர் கவிதா (36). இவர் மகேஸ்வரி (37) என்பவருடன் டூவீலரில் மங்களூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்களும் படுகாயமடைந்து, வேப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


