News September 28, 2024

கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News December 30, 2025

கடலூர்: வேன் மோதி முதியவர் துடிதுடித்து பலி

image

பரங்கிப்பேட்டை அருகே அரியகோஷ்டி மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (70). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வேன் ஒன்று குமரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 30, 2025

கடலூரில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எஸ்பி தகவல்

image

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 307 குட்கா போதைப்பொருட்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 403 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6,224 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று(டிச.29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News December 30, 2025

கடலூர்: அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்

image

கடலூர் மாவட்டம், கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள மறைக்காயர் குளத்தில், 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சடலத்தை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!