News September 28, 2024
கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News January 2, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான வரும் ஏப்.15ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு அரசு உதவி இல்லாமல் திருநங்கைகள் சுயமாக முன்னேறி இருப்பவர்கள் <
News January 2, 2026
கடலூர்: தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

கடலுார் முதுநகர் அடுத்த குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ரத்னாம்பாள் (80). கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர், விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது, அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் படுகாயமடைந்தார். இதில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


