News September 28, 2024
கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 22, 2025
கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை!

கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.23) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சேத்தியாத்தோப்பு, புவனகிரி, சோழதரம், ஒரத்தூர், ஒறையூர், பின்னலூர், நெல்லித்தோப்பு, சாத்தப்பட்டு, கீழாம்பட்டு, வடக்குத்து, இந்திரா நகர், வடலூர், குறிஞ்சிப்பாடி, வளையமாதேவி, பு.ஆதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி மின்விநியோகம் இருக்காது.
News December 22, 2025
கடலூர்: அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்பு

குமளங்குளத்தை சேர்ந்தவர் கனகா (36). இவரது கணவர் சில ஆண்களுக்கு முன் விபத்தில் இறந்த நிலையில், கனகா தன் பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கனகா மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் தூக்கில் அழுகிய நிலையில், கனகா சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் தொடர்பு எண்கள்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


