News May 18, 2024

CSKvsRCB: மழையால் போட்டி தற்காலிகமாக ரத்து

image

CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு லேசாக சாரல் வீசிய நிலையிலும், டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. 3 ஓவர்கள் முடிந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியதால், நடுவர்கள் போட்டியை நிறுத்த உத்தரவிட்டனர். மழை நின்றதும் போட்டி தொடங்கப்படும் மீண்டும் என்றும், இல்லையென்றால் ஓவர்கள் குறைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News August 28, 2025

சஞ்சு பின்வரிசையில் விளையாட முடியுமா?

image

டி20 தொடக்க வீரராக அசத்தி வந்த சஞ்சு சாம்சனுக்கு ஆசிய கோப்பையில் அந்த வாய்ப்பு கிடைப்பது கடினமாக மாறியுள்ளது. அணியில் சுப்மன் கில் நுழைந்துள்ளதே அதற்கு காரணம். டாப் ஆர்டர் நிரம்பியுள்ளதால் சஞ்சுவுக்கு லெவனில் விளையாட வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் சஞ்சுவால் பின்வரிசையிலும் விளையாட முடியும் என அவரது மென்டர் ரைபி கோம்ஸ் தெரிவித்துள்ளார். சஞ்சுவுக்கு எந்த இடத்தில் வாய்ப்பு கிடைக்கலாம்?

News August 28, 2025

Health Tips: இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

image

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

News August 28, 2025

BREAKING: அடுத்தடுத்து விஜய் ரசிகர்கள் மரணம்

image

தவெக மாநாட்டிற்கு முன்பும், பின்பும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். வேலூரை சேர்ந்த மதன், நண்பர்களுடன் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சாப்பிட சென்றுள்ளார். அப்போது மதன் காணாமல் போன நிலையில், கரூர் அரவக்குறிச்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் 22-ம் தேதி விபத்தில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதால் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!