News May 17, 2024
CSK-க்கு வாழ்வா சாவா போட்டி

CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலோ அல்லது மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டாலோ, CSK அணி 4ஆவது அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதே வேளை, 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் RCB அணி இலக்கை அடைந்தால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். யார் வெற்றி பெறுவார்?
Similar News
News November 24, 2025
BREAKING: மொத்தம் 17 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எதிரொலியால் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, <<18372068>>14 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மதுரை, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இன்னும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 24, 2025
திமுகவுக்கு, தவெக என்றாலே ஒரு உறுத்தல்: டிடிவி தினகரன்

திமுகவுக்கு தவெக என்றாலே உறுத்தலாக இருப்பது அவர்களின் பேச்சிலேயே தெரிவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். கூட்டணி பற்றி பல கட்சிகள் பேசுவதாக கூறிய அவர், அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என மீண்டும் உறுதியாக கூறியுள்ளார். சமீபகாலமாக இவர் விஜய்க்கு ஆதரவான கருத்துகளை பேசி வருவதால், அமமுக தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
News November 24, 2025
சிகரெட்டை நிறுத்த உதவும் சிறந்த மூலிகை!

புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஓர் ஆண்டில் சுமார் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக WHO தெரிவித்துள்ளது. இதெல்லாம் தெரிந்தும் உங்களால் சிகரெட் பழக்கத்தை கைவிட முடியவில்லையா? இதற்கு அஸ்வகந்தா எனும் அற்புத மூலிகை உங்களுக்கு உதவும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை பாலில் கலந்து குடித்து வர சிகரெட் மீதான் மோகம் குறையும். பலரது உயிரை காக்கும் SHARE THIS.


