News April 25, 2025
CSK vs SRH: பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கப் போவது யார்?

புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள CSK, SRH அணிகளுக்கு இனிவரும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா ஆட்டம்தான். இரு அணிகளும் இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் இன்றிரவு மல்லுக்கட்ட உள்ளன. இதில், தோல்வி அடையும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மங்கும். இன்றைய போட்டியில் CSK ஜெயிக்குமா?
Similar News
News December 24, 2025
பொங்கல் பரிசு ₹5,000.. அமைச்சர் கொடுத்த அப்டேட்

பொங்கல் பரிசு அறிவிப்பை அரசு தற்போது வரை வெளியிடாமல் இருப்பதால் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தாண்டு பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், CM ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்ற அப்டேட் கொடுத்துள்ளார்.
News December 24, 2025
‘மெர்சல்’ சினிமா பாணியில் நடந்த ரியல் சம்பவம்!

மெர்சல் படத்தில் ஏர்போர்ட்டில் இளம்பெண்ணை தாவி குதித்து விஜய் காப்பாற்றுவது போலவே ரியலாக கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொச்சியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய வினுவை(40) அவ்வழியாக சென்ற டாக்டர்கள் தாமஸ், திதியா, மனூப் மூவரும் சிறிதும் தாமதிக்காமல், நடுரோட்டில் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அவரின் கழுத்தில் துளையிட்டு ஸ்ட்ரா மூலம் மூச்சுவிட செய்து காப்பாற்றியுள்ளனர். Congrats Doctors!
News December 24, 2025
இபிஎஸ்-க்கு சசிகலா ஆதரவா?

MGR நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா, உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், EPS-ன் தலைமை சரியில்லை என OPS, TTV விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அக்கருத்தை ஏற்காத அவர், மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். இது மறைமுகமாக EPS-க்கு ஆதரவு நிலைப்பாடு என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


