News April 25, 2025
CSK vs SRH: பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கப் போவது யார்?

புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள CSK, SRH அணிகளுக்கு இனிவரும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா ஆட்டம்தான். இரு அணிகளும் இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் இன்றிரவு மல்லுக்கட்ட உள்ளன. இதில், தோல்வி அடையும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மங்கும். இன்றைய போட்டியில் CSK ஜெயிக்குமா?
Similar News
News November 28, 2025
மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் லீவு

‘டிட்வா’ புயல் எதிரொலியால் தி<<18410367>>ருவாரூர், மயிலாடுதுறையை <<>>தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் வேகமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று(நவ.28) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News November 28, 2025
திமுகவில் இணைய முயலவில்லை: மல்லை சத்யா

திமுகவில் இணையவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கான முயற்சியை எடுக்கவில்லை என மல்லை சத்யா கூறியுள்ளார். இதற்கான காரணத்தை கூறிய அவர், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதால் அவர்களுக்கு எந்த குளறுபடியும் வந்துவிடக்கூடாது என கருதியதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், திராவிட கொள்கைக்கு எதிரான கட்சிகளுடனும், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியிலும், சேரும் திட்டமில்லை எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News November 28, 2025
2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் லீவு!

‘டிட்வா’ புயல் எதிரொலியால் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.28) அரைநாள்(மதியம்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


