News April 30, 2025

இன்று CSK vs PBKS.. விசில் பறக்குமா?

image

ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, மீதமிருக்கும் 5 போட்டிகளில் வென்று கவுரமாக சீசனை விட்டு வெளியேற முயற்சிக்கும். அதேபோல், 5-வது இடத்தில் உள்ள பஞ்சாப், பிளேஆஃப் செல்ல முயற்சிக்கும். எனவே இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

Similar News

News February 8, 2026

தமிழ்நாட்டில் புதிதாக 6 மாவட்டங்கள்.. அடுத்த அறிவிப்பு

image

அதிமுக 2 கட்டங்களாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், விரைவில் 3-ம் கட்ட வாக்குறுதியை EPS வெளியிட உள்ளார். அதில், பொள்ளாச்சி, கும்பகோணம், ஆத்தூர், விருத்தாசலம், பழனி, சிவகாசி மாவட்டங்களுக்கான அறிவிப்பு இடம் பெற உள்ளதாம். மக்களின் நீண்டநாள் கோரிக்கை என்பதால் இந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுக்க உள்ளது. பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வரும் 10-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

News February 8, 2026

QR Code மூலம் விருப்ப மனு.. புதிய பாதையில் தவெக

image

தவெக விருப்ப மனு அளிக்க தொடங்கிய நாளில், பனையூரில் பலரும் குவிந்ததால் அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டனர். இதனால் இணையதளம் மூலம் விருப்ப மனு அளிக்கும்படி கட்சியினருக்கு தவெக தலைமை உத்தரவிட்டது. இந்நிலையில், QR Code மூலமும் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே முதல்முறையாக QR மூலம் விருப்ப மனு பெறும் கட்சி தவெக என தொண்டர்கள் கூறி மகிழ்கின்றனர். உங்கள் கருத்து என்ன?

News February 8, 2026

இன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

image

இரவு 8 – 11:30 மணிக்குள் எந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 4 மிளகை எடுத்துக்கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள். அதன் பிறகு, 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான். இப்பரிகாரத்தை 3 வாரம் தொடர்ந்து செய்தால், கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்!

error: Content is protected !!