News March 17, 2024

சென்னை வந்தடைந்த CSK வீரர்கள்

image

2024 ஐபிஎல் தொடருக்காக, CSK வீரர்கள் (நியூசிலாந்து) ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். டேவன் கான்வே, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. இதற்காக தீவிர பயிற்சியில் இறங்கியுள்ள சென்னை அணி, முதல் போட்டியில் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Similar News

News April 12, 2025

‘கதக்’ கலைஞர் குமுதினி காலமானார்

image

இந்தியாவின் தலைசிறந்த கதக் நடனக் கலைஞர்களில் ஒருவரான குமுதினி லக்கியா(95), வயது மூப்பு காரணமாக அகமதாபாத்தில் காலமானர். கதக் நடனத்துக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட குமுதினிக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய உயரிய விருதுகளை வழங்கி அரசு கவுரவித்துள்ளது. கதக் நடன வளர்ச்சிக்காக ‘கடம்ப் செண்டர் ஃபார் டான்ஸ்’ அமைப்பையும் அவர் நடத்தி வந்தார்.

News April 12, 2025

சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் பொன்முடி

image

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார். தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி தாம் பேசிய பேச்சுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியுள்ளார். தபெதிக விழாவில் பேசியபோது பெண்கள், சைவம், வைணவம் குறித்த அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கனிமொழி உள்ளிட்டாேர் கண்டனம் தெரிவித்ததால், திமுகவில் அவரது பதவி பறிக்கப்பட்டது.

News April 12, 2025

அகாலிதளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

image

சிரோமணி அகாலி தளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரகாஷ் சிங் பாதலுக்கு பிறகு அகாலி தளம் தலைவராக 2008-ல் பதவியேற்ற சுக்பீர் சிங் பாதல் கடந்தாண்டு வரை அப்பதவியில் இருந்தார். சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகால் தத் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தற்போது மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!