News March 28, 2025
பர்பிள் தொப்பியை தட்டித் தூக்கிய சிஎஸ்கே வீரர்…!

சிஎஸ்கே அணியால் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நூர் அகமது, அதிக விக்கெட்டுகளை (7) வீழ்த்தியவர்களுக்கான பர்பிள் தொப்பியை தனதாக்கிக் கொண்டுள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை லக்னோ வீரர் ஷர்துல் தாகூர் (6) பிடித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
அரையாண்டு விடுமுறை.. தற்போது வெளியான அப்டேட்

அரையாண்டு, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிச.15 முதல் 23 வரை நடைபெறுகிறது. டிச.24 – ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை வருகிறது. அதேபோல், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிச.25-ம் தேதி விடுமுறையாகும். இதனால், விடுமுறைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
News October 25, 2025
ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி வழங்குக

பள்ளி ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக CM ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால், இதுகுறித்து ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வார் என்றும் விரைவில் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
News October 25, 2025
அரசியல் களத்தில் விஜய் தடுமாறுவது ஏன்?

சினிமாவில் ஜொலித்த விஜய்க்கு அரசியல் களத்தில் அடுத்தடுத்து தடைகள் ஏற்பட்டு வருகின்றன. சோசியல் மீடியா மற்றும் பிரசார களங்களில் பம்பரமாக சுழன்று வந்த அக்கட்சியின் தொண்டர்கள் சிறிது காலமாக சைலண்ட் மோடில் உள்ளனர். இதற்கு கரூர் சம்பவம் காரணமாக கூறப்பட்டாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் விஜய் தடுமாறுவதாகவும் கூறுகின்றனர். தங்களது ஆதங்கத்தை சிலர் விஜய்யை Tag செய்து X பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.


