News March 28, 2025
பர்பிள் தொப்பியை தட்டித் தூக்கிய சிஎஸ்கே வீரர்…!

சிஎஸ்கே அணியால் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நூர் அகமது, அதிக விக்கெட்டுகளை (7) வீழ்த்தியவர்களுக்கான பர்பிள் தொப்பியை தனதாக்கிக் கொண்டுள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை லக்னோ வீரர் ஷர்துல் தாகூர் (6) பிடித்துள்ளார்.
Similar News
News March 31, 2025
ஊட்டிக்கு வர இ-பாஸ் கட்டாயம்

ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற ஆணைக்கிணங்க ஏற்கெனவே கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நீலகிரியிலும் ஏப்ரல் 1 முதல் ஜூன் மாதம் வரை இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. வார நாள்களில் 6000 வாகனங்களும் வார இறுதியில் 8000 வாகனங்களும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 31, 2025
ஏப்ரலில் வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை

ஏப்ரலில் வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை. ஏப். 1 வருட கடைசி கணக்கு நிறைவு நாள் என்பதால் விடுமுறை. ஏப்.10 மகாவீர் ஜெயந்தி, ஏப். 14 தமிழ் புத்தாண்டு, ஏப். 18 புனித வெள்ளி ஆகும். இந்த நாட்களிலும், ஏப்ரல் 6, 12, 13, 20, 26, 27 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால் அன்றைய நாள்களும் விடுமுறை ஆகும். இந்த 10 நாள்களும் வங்கிகள் திறந்திருக்காது. இதை வைத்து திட்டமிட்டு வங்கி செல்லுங்கள்.
News March 31, 2025
சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி… எதில் தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் கொண்ட அணி என்ற சாதனையை நீண்டகாலமாக சிஎஸ்கே தன்வசம் வைத்திருந்தது. தற்போது அதனை ஆர்சிபி கைப்பற்றியுள்ளது. 17.8 மில்லியன் பாலோயர்ஸ் உடன் ஆர்சிபி முதலிடத்தில் உள்ளது. 17.7 மில்லியன் பாலோயர்ஸ் உடன் சிஎஸ்கே இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனா, இதுக்கெல்லாம் கப்பு தரமாட்டாங்க என சிஎஸ்கே ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.