News June 1, 2024
ஒரு வீரரை சிஎஸ்கே இழக்க நேரிடலாம்

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதுவரை 4 வீரர்களை தக்க வைக்கலாம் என்று இருந்த சட்டத்தை 3 வீரர்களாக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இது சிஎஸ்கே அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தோனி, ஜடேஜா, ருதுராஜ், பதிரனா, துபே ஆகிய வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். 3 பேரை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற விதி வந்துவிட்டால், இதில் ஒருவரை CSK இழக்க நேரிடலாம்.
Similar News
News September 19, 2025
மீண்டும் உயர தொடங்கிய அதானி குழும பங்குகள்

வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி, செயற்கையான முறையில் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்வதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் அது தவறான குற்றச்சாட்டு என செபி நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் இன்று லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. அதானி குழுமத்தின் பங்குகள் 10% வரை உயர்வுடன் வா்த்தகத்தை தொடங்கியுள்ளன.
News September 19, 2025
ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் யார் யார்?

2007-ம் ஆண்டு இதேநாளில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு யுவராஜ் சிங் கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்தார். ஆனால் யுவராஜ் சிங்கை தவிர்த்து சர்வதேச கிரிக்கெட் மற்றும் IPL-ல் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்தது யார் யார் என்று தெரியுமா? அந்த பட்டியலை மேலே புகைப்படங்களாக கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக Swipe செய்து பாருங்கள்.
News September 19, 2025
வெறும் 40 பைசாவில் ₹10 லட்சம் இன்சூரன்ஸ்!

ரயிலில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால் மருத்துவம் பார்க்க, ₹10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போதே இந்த இன்சூரன்சுக்கான ஆப்ஷனை க்ளிக் செய்து, 40 பைசாவை கட்டினால் போதும். ரயில் விபத்தில் ஒருவர் இறந்தாலோ, உடல் முழுவதுமாக செயலிழந்தாலோ ₹10 லட்சம் வரை கிடைக்கும். பகுதியளவு செயலிழந்தால் ₹7.5 லட்சமும், காயம் ஏற்பட்டால் ₹2 லட்சமும் வழங்கப்படுகிறது. SHARE.