News April 13, 2025
பரிதாபமான நிலையில் CSK

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன்களான CSK, MI ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. குறிப்பாக IPL-லில் அதிக ரசிகர் பட்டத்தை வைத்துள்ள CSK கடைசி இடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சொதப்பி வரும் CSK வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தகுதிச் சுற்றுக்கும் முன்னேற முடியும். இல்லையென்றால், லீக் சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்படும்.
Similar News
News April 13, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய்

வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமானது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி விஜய் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.
News April 13, 2025
கலவரத்துக்கு நடுவே டீ குடிச்சிட்டு நிற்கும் யூசுப் பதான்!

வக்ஃபு சட்டம் அமலானதை தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. இந்த கலவரத்துக்கு மத்தியில், அப்பகுதியின் TMC MP யூசுப் பதான், இன்ஸ்டாவில் டீ குடிப்பதை போன்ற ஒரு போட்டோவுடன், ‘Relaxing afternoon, good tea and peaceful atmosphere. Just enjoying this moment’ என பதிவிட்டார். இது பெரும் கண்டனங்களை பெற்று, யூசுப் பதானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
News April 13, 2025
மழையால் டாஸ்மாக்கில் சரிந்த பீர் விற்பனை

டாஸ்மாக்கில் ஏப்.1 முதல் 7-ம் தேதி வரையிலான பீர் விற்பனை புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 95.64 லட்சம் பீர் விற்பனையாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 2024ல் இதேகாலத்தில் 1.30 கோடி பீர்கள் விற்பனையாகி இருந்தன. அந்த விற்பனை தற்போது சரிந்துள்ளது. சில மாவட்டங்களில் மழை பெய்ததே விற்பனை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே விற்பனையை அதிகரிக்க 5 புதிய பீர்களை டாஸ்மாக் அறிமுகப்படுத்தவுள்ளது.