News March 29, 2025
CSK-வை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்ததால், மது போதையில் இளைஞரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டை பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஜீவரத்தினம் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக, அப்பு ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் நேற்று (மார்.28) கைது செய்தனர்.
Similar News
News September 17, 2025
கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 17ம் தேதி தாம்பரம் வருவாய் கோட்டத்தில் காலை 10:30 மணிக்கு மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையிலும், செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்ன மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
செங்கல்பட்டு: பாமக முன்னாள் நிர்வாகி படுகொலை

செங்கல்பட்டு அருகே, இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவரும், பாமக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வாசு என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனங்களுக்குக் கேட்டரிங் மற்றும் குடிநீர் விநியோகம் செய்து வந்த இவர், லாரியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொழில் போட்டிக்காரணமாக கொலை நடைபெற்றதா என, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.