News March 29, 2025

CSK-வை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்ததால், மது போதையில் இளைஞரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டை பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஜீவரத்தினம் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக, அப்பு ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் நேற்று (மார்.28) கைது செய்தனர்.

Similar News

News November 17, 2025

செங்கல்பட்டு: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

image

செங்கல்பட்டு: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 17, 2025

செங்கல்பட்டு: 677 தேர்வாளர்கள் ஆப்சென்ட்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடைபெற்றது. செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட 18 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 5,906 பேரில், 677 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால், 5,229 பேர் மட்டுமே இந்தத் தகுதித் தேர்வை எழுதினர்.

News November 17, 2025

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ORANGE ALERT!

image

இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் சனிக்கிழமை (நவ.15) நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை (நவ.16) காலை அதே பகுதிகளில் நிலவியது. இது திங்கள்கிழமை (நவ.17) காலை மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும். இதன் செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை இருக்கா…?

error: Content is protected !!