News September 23, 2024
கொடூரம்: சிறுமியை வன்புணர்வு செய்த சிறுவர்கள்

உத்தரபிரதேசத்தில் 7,8 வயதுள்ள இரண்டு சிறுவர்கள், 7 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமி குளித்துக் கொண்டிருந்ததை பார்த்த சிறுவர்கள், தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி உடல் சோர்வாக காணப்பட்டதைக் கண்ட பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, உண்மை தெரியவந்துள்ளது. 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 5, 2025
காவல் நிலைய மரணங்கள்.. SC எடுத்த முடிவு

நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் CCTV பொறுத்தப்படாததை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. கடந்த 8 மாதங்களில் 11 காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியதாக வெளியான அறிக்கையின்படி சுப்ரீம் கோர்ட் இந்த முடிவை எடுத்திருக்கிறது. 2020-ல் ஒரு வழக்கின் விசாரணையில் சுப்ரீம் கோர்ட் எல்லா காவல் நிலையங்களில் CCTV பொறுத்த உத்தரவிட்டது. எனினும் பல காவல் நிலையங்களில் இது நடைமுறையில் இல்லை.
News September 5, 2025
இளையராஜாவின் காப்பிரைட் விவகாரம்.. மிஷ்கின் கேள்வி

இளையராஜா தனது பாடல்களுக்கு காப்பிரைட் கேட்பது குறித்து மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பாடல்கள் தாய் பால் மாதிரி எனவும், இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் புதிதாக பாடல்களை போடாமல், இளையாராஜா பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இசை மேல் இருக்கும் மரியாதைக்காவது இசைஞானியிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News September 5, 2025
ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு அழைத்த PM

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயெனுடன் PM மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தலைவர்கள் வரவேற்றனர். உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும், அந்த 2 ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு வருமாறு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார்.