News October 2, 2025

அரசு வேலைக்காக குழந்தையை புதைத்த கொடூர பெற்றோர்

image

ம.பி.,யில் உள்ள காட்டில் சமீபத்தில், பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், தனது அரசு வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் கணவனும், மனைவியும் தங்களது 4-வது குழந்தையை உயிருடன் புதைத்தது தெரியவந்துள்ளது. ம.பி.,யில் அரசு பணியாளர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதால், 3-வது குழந்தையையும் அத்தம்பதி அரசு ஆவணங்களில் இருந்து மறைத்துள்ளனர்.

Similar News

News October 2, 2025

இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்த நிலையில், தமிழகத்தில் 3 நாள்களுக்கு <<17894555>>மஞ்சள் அலர்ட்<<>> எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் நண்பர்களே!

News October 2, 2025

குறைந்த முதலீட்டில் பயனடைய விருப்பமா?

image

குறைந்த முதலீட்டில் பயனடைய சிறந்த போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்ஸ் ஏராளமானவை உள்ளன. அவை என்னென்ன ஸ்கீம்ஸ் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இவை அனைத்தும், சிறிய தொகையுடன் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலத்திற்கான முதலீடுகள். இவற்றில் நீங்கள் விரும்பும் ஸ்கீம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 2, 2025

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு புது ஆயுதம் தரும் அமெரிக்கா

image

ரஷ்யாவை பணிய வைக்க முடியாத விரக்தியில், டிரம்ப் புது வியூகத்தை கையிலெடுக்கிறார். 2,500 கிமீ தொலைவு சென்று தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இவற்றை கொண்டு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை உக்ரைனால் தாக்க முடியும். அமெரிக்கா அப்படி முடிவுசெய்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

error: Content is protected !!