News February 14, 2025
சிஆர்பிஎஃப் வீரர் வெறிச்செயல்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739467693877_1204-normal-WIFI.webp)
மணிப்பூரில் சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படை முகாமில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 120வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் சஞ்சய் குமார் என்பவர் இன்று காலை திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதன் பிறகு, தன்னை தானே சுட்டுக் கொண்டு சஞ்சய் குமார் தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News February 14, 2025
தலாய்லாமாவுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739468199192_1204-normal-WIFI.webp)
திபெத்திய மத குரு தலாய்லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்ததை அடுத்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. திபெத் விவகாரத்தில் தலாய்லாமா மீது கோபத்தில் உள்ள சீனா, அவரை கொல்ல பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாக இந்திய உளவு அமைப்புகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இமாச்சலில் உள்ள அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
News February 14, 2025
காதல் பேசும் காதலர் தின உடைகள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739468010424_1142-normal-WIFI.webp)
காதலர் தினத்தன்று (பிப்.14) அணியும் வண்ண உடைகளுக்கு பல அர்த்தம் காெள்ளப்படுகிறது. அதை இங்கு பார்க்கலாம். 1) வெள்ளை: காதல் உறவில் அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என அர்த்தம் 2) ஆரஞ்சு: யாரையோ மனதில் நினைத்திருக்கிறார்கள் என அர்த்தம் 3) பிங்க்: யாருடைய ப்ரபோசலையோ ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். நீங்கள் என்ன நிற உடை அணிய போகிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.
News February 14, 2025
பரஸ்பர வரி விதிப்போம்: டிரம்ப் அதிரடி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739479527068_785-normal-WIFI.webp)
USAவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது, USAவிற்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே வரியை தாங்களும் விதிக்க உள்ளதாக கூறியுள்ளார். இது மிகவும் எளிமையானது, நாங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ வசூலிக்கவில்லை என்றார். மற்ற எந்த நாட்டை காட்டிலும், இந்தியாவே அதிக விரி விதிப்பதாக சுட்டிக்காட்டி, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.