News January 9, 2025
சபரிமலையில் அலைமோதும் கூட்டம்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் தேவசம்போர்டு திணறி வருகிறது. ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களில் 10,000 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், தினமும் 25,000 பேர் வரை பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 90,000 பக்தர்கள் வந்தால் பிரச்னை இல்லையென கூறும் போலீசார், ஒரு லட்சம் பேர் வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
Similar News
News January 14, 2026
சிவாஜியின் பராசக்திக்கு 130 கட் கொடுத்தார்கள்: வானதி

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளியான சிவாஜியின் பராசக்தி படத்திற்கு 2 நாட்கள் சென்சார் செய்து, 130 கட் கொடுக்கப்பட்டதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் எமர்ஜென்சி மூலம் இந்தியாவின் குரல்வளையை நெறித்தது காங்கிரஸ் தான் என்றும், ஜன நாயகன் விவகாரம் நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது எனத் தெரிந்தும் வேண்டுமென்றே பாஜகவை ராகுல்காந்தி குறை கூறுவதாகவும் வானதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
News January 14, 2026
TCS-ல் பணி நீக்கம் தொடர்கிறது!

AI-ன் தாக்கத்தால் கடந்த 6 மாதங்களில் 30,000 பேரை TCS நிறுவனம் பணி நீக்கம் செய்திருந்தது. இந்நிலையில் தங்களது நிறுவனத்தில் மறுசீரமைப்பு திட்டம் முடியவில்லை என்றும், தேவைப்பட்டால் 2026-லும் பணி நீக்கம் தொடரும் எனவும் TCS தெரிவித்துள்ளது. 3-வது காலாண்டின் முடிவிற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. செப். காலாண்டில் 19,755 பேரையும், டிச. காலாண்டில் 11,151 பேரையும் TCS பணிநீக்கம் செய்திருந்தது.
News January 14, 2026
ஈரானியர்களே போராட்டத்தை கைவிட வேண்டாம்: டிரம்ப்

தொடர்ந்து போராடி நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுமாறு ஈரானியர்களுக்கு US அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஈரானில் போராடும் மக்களுக்கு உதவி தயாராக இருக்கிறது எனவும், மக்களை கொல்வதை நிறுத்தும் வரை ஈரானிய அதிகாரிகளை சந்திக்கவே மாட்டேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் வெடித்துள்ள போராட்டத்தால் இதுவரை சுமார் 2,000 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


