News June 16, 2024
முன்பதிவு பெட்டிகளில் அலைமோதும் கூட்டம்

வடமாநிலங்களைப் போலவே சமீப காலமாக தமிழ்நாட்டிலும் ரயில் முன்பதிவு பெட்டிகளில், டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாள்களில் முன்பதிவு பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வார இறுதி, பண்டிகை நாள்களில் கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 10, 2025
அணி மாறி வாக்களித்த INDIA கூட்டணி MP-கள்

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் NDA வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் INDIA கூட்டணியின் 315 எம்.பி.க்கள் வாக்களித்ததாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. எனவே, INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் எதிரணி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தது உறுதியாகியுள்ளது.
News September 10, 2025
சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக கொள்கைகளுக்கான தனது கடமைகளை சிபி ராதாகிருஷ்ணன் உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புவதாக X தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல EPS உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
News September 10, 2025
இவங்களும் செல்லாத ஓட்டு போடுறாங்களாம்..!

படிக்காத பாமர மக்கள்தான் விவரம் தெரியாம செல்லாத ஓட்டு போடுறாங்கன்னு பார்த்தா, துணை ஜனாதிபதி எலெக்ஷன் வரை இந்த பிரச்னை இருக்கும் போலயே. இன்னைக்கு நடந்த எலெக்ஷன்ல, 767 பேர் மொத்தமா ஓட்டு போட்ருக்காங்க. அதுல சிபி ராதாகிருஷ்ணன் 452 ஓட்டு வாங்கிருக்காரு. சுதர்சன் ரெட்டி 300 ஓட்டு வாங்கிருக்காரு. மீதி இருக்கிற 15 செல்லாத ஓட்டாம். மாதிரி எலெக்ஷன்லாம் நடத்துறாங்க. அப்பவும் இப்படி நடந்தா எப்படி?