News March 21, 2025
ஒரு லட்சம் அட்மிஷனை கடந்தது

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கை தற்போதுவரை 14 வேலை நாட்களைக் கடந்துள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் 8,000க்கும் அதிகமான மாணவர்களை பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
Similar News
News March 28, 2025
செவ்வாய் தோஷம் நீங்க…

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுகிறது என கவலையில் மனம் வாடுவோர் செவ்வாய்க்கிழமையில் வரும் சதுர்த்தி திதி நாளில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை சாற்றி, 32 தீபங்களை ஏற்றி, முக்குறுணி மோதகம் படைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். குறிப்பாக இந்த வழிபாடு செய்த கையோடு 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் செவ்வாய் தோஷம் விலகும் என ஐதீகம்.
News March 28, 2025
பிளே ஆப் செல்லும் அணிகள் எவை? இர்பான் கணிப்பு

ஐ.பி.எல்.2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இதற்கான விடை நமக்கு கிடைத்துவிடும்.
News March 28, 2025
தினமும் காலையில் 2 முட்டை சாப்பிடுங்க

முட்டையில் 13 வகையான வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா-3 போன்றவை நிறைந்துள்ளது. அதனால் எந்த சந்தேகமும் இல்லாமல் தினசரி காலை 2 முட்டையை சாப்பிடுவது நல்லது. முட்டையின் மஞ்சள் கரு நல்ல கண்பார்வையை தரும். மூளை செயல்பாட்டை மேம்படுத்துவது, உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது, குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவது என பல்வேறு நன்மைகளை தரும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.