News April 8, 2025
விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்: அமைச்சர்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் நேரில் விண்ணப்பித்தால், ஒரு வாரத்திற்குள் கடன் வழங்கும் நடைமுறை தற்போது இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கும் முறை தொடங்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 17, 2025
சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்பு

தேவை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நுவாமா நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 2025 ஏப்ரல் மாத நிலவரப்படி, தென்னிந்தியாவில் அதிகமாக விலை உயர்ந்திருப்பதாகவும், நாட்டின் மத்திய, கிழக்கு, வட மாநிலங்களில் விலை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இம்மாத இறுதியில் விலை சற்று குறையும் என டீலர்கள் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 17, 2025
உங்க பெயரில் போலி சிம் இருக்குதான்னு தெரியணுமா?

◆ https://sancharsaathi.gov.in/ பக்கத்துக்குச் செல்லவும் ◆‘Useful Links’ஐ கிளிக் செய்து, அதில், ‘Know Mobile Connections in Your Name’ஐ கிளிக் செய்யவும் ◆ உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவிட்டு, ‘Captcha’வை பதிவிடவும் ◆போனுக்கு வரும் OTP-யை கொடுத்தால், உங்கள் பெயரில் இருக்கும் மொபைல் எண்கள் காட்டும் *அதில் செக் பண்ணி, எந்த நம்பர் உங்களுடையது இல்லையோ அதை புகார் செய்யலாம்.
News April 17, 2025
45 நாள்கள் விடுமுறை.. பள்ளி மாணவர்கள் குஷி!

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வுகள் நிறைவடைந்தது. 45 நாள்கள் கோடை விடுமுறை தொடங்கியதால் மாணவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கும் வரும் 23-ம் தேதியோடு தேர்வுகள் முடிவடைவதால் பின்னர் விடுமுறையாகும்.