News April 8, 2025
விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்: அமைச்சர்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் நேரில் விண்ணப்பித்தால், ஒரு வாரத்திற்குள் கடன் வழங்கும் நடைமுறை தற்போது இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கும் முறை தொடங்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 23, 2025
20 கோடி திருப்பதி லட்டுகளில் கலப்படம்!

<<18250479>>திருப்பதி<<>> ஏழுமலையான் கோயிலில் சுமார் 20 கோடி லட்டுகள், கலப்படம் செய்யப்பட்ட நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்த லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான SIT விசாரணையில், ₹250 கோடி மதிப்பிலான சுமார் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
கண்களால் கொள்ளை கொள்ளும் வாமிகா கபி

‘மாலை நேரத்து மயக்கம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா கபி, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ‘DC’ படத்தில் நடிக்கிறார். இவருக்கு, DC டைட்டில் டீசரிலேயே பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. இவரது இன்ஸ்டா பதிவுகள், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. சமீபத்தில், பதிவிட்ட போட்டோஸுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 23, 2025
அதிமுக மூத்த தலைவர் காலமானார்.. இபிஎஸ் இரங்கல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் சம்பந்தியும், கட்சியின் மூத்த தலைவருமான சிந்து சண்முகம் மறைவுக்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் அவர் மறைந்த செய்தியை அறிந்து வேதனையுற்றதாகவும், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பவானி நகரச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை சிந்து சண்முகம் வகித்திருக்கிறார். RIP


