News June 28, 2024
குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு

தமிழக அரசு, 3 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவித்துள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டெல்டாவில் குறுவை சாகுபடி அறுவடையின்போது பெரும்பாலும் மழைக்காலமாக இருப்பதால் பெருமளவு இழப்பீடு வழங்க வேண்டியிருந்தது. இதனால் 3 ஆண்டுகளாக தனியார் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு வழங்க முன்வராமல் இருந்தன. இந்நிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு கண்டுள்ளது.
Similar News
News November 20, 2025
குழப்பத்தை ஏற்படுத்தும் ‘காலக்கெடு’

SC இன்று அளித்துள்ள <<18338011>>தீர்ப்பு<<>>, கவர்னருக்கு நிர்ணயித்திருந்த காலக்கெடுவை நீக்கி, ‘நியாயமான காலத்துக்குள்’ என மாற்றியுள்ளது. மேலும், மசோதாவை நிறுத்திவைக்க, முடிவெடுக்காமல் இருக்க(அ) திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரமுண்டு, ஆனால் காலவரையறையின்றி நிறுத்திவைக்கக் கூடாது என்கிறது தீர்ப்பு. ‘நியாயமான காலம்’ என்பது எத்தனை நாள்கள்? ‘காலவரையின்றி’ என்பதை எப்போது முடிவு செய்வது? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
News November 20, 2025
BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

முட்டை கொள்முதல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இன்று 5 காசுகள் அதிகரித்த நிலையில், கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோழித்தீவன மூலப் பொருள்களின் விலையேற்றமே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உங்க பகுதியில் விலை என்ன?
News November 20, 2025
CBSE பள்ளிகளுக்கு பறந்தது எச்சரிக்கை

CBSE 10, +2 மாணவர்களுக்கான பிராக்டிக்கல் தேர்வுகள், புராஜெக்ட் அசெஸ்மெண்ட் முடிந்தவுடன் மதிப்பெண்களை இணையதளத்தில் கவனமுடன் பதிவேற்றுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிழைகள் இல்லாமல் மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் என்றும், பிழைகளை திருத்துவதற்குப் பின்னர் சாக்குப்போக்கு சொல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஜன.1 முதல் பிப்.14 வரை பிராக்டிக்கல் தேர்வுகள் நடைபெற உள்ளன.


