News June 28, 2024
குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு

தமிழக அரசு, 3 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவித்துள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டெல்டாவில் குறுவை சாகுபடி அறுவடையின்போது பெரும்பாலும் மழைக்காலமாக இருப்பதால் பெருமளவு இழப்பீடு வழங்க வேண்டியிருந்தது. இதனால் 3 ஆண்டுகளாக தனியார் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு வழங்க முன்வராமல் இருந்தன. இந்நிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு கண்டுள்ளது.
Similar News
News December 9, 2025
2025-ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய PHOTOS

2025-ம் ஆண்டு ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதிர்ச்சி, துக்கம், விரக்தி, பெருமை, நம்பிக்கை, மகிழ்ச்சி என கலவையான எமோஷன்களை ஏற்படுத்திய நிறைய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதில் மிக மிக முக்கியமான சம்பவங்களை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். 2025-ம் ஆண்டை ரீவைண்ட் செய்து பார்க்க அவற்றை SWIPE செய்யுங்கள். உங்கள் மனதை உலுக்கிய சம்பவத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News December 9, 2025
சற்றுமுன்: விஜய் கூட்டத்தில் அதிரடி கைது

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு <<18510199>>துப்பாக்கியுடன் <<>>வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பொதுக்கூட்டத்திற்கு வந்த சிவகங்கையை சேர்ந்த ஒருவரின் இடுப்பில் துப்பாக்கி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வந்தநிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
News December 9, 2025
தமிழகத்தில் தவெகவுக்கு சிக்கல்: புஸ்ஸி ஆனந்த்

தமிழகத்தில் எல்லா வகையிலும் தவெக பரப்புரைக்கு சிக்கல் ஏற்படுத்துகின்றனர் என புஸ்ஸி ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய அவர், மற்ற கட்சிகள் புதுச்சேரியில் இவ்வளவு கூட்டத்தை கூட்டுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சிலவற்றை கொடுத்து உழைக்க வேண்டும் என கூறினார். தற்போது தளபதியின் (விஜய்) குடும்பமாகவே தொண்டர்கள் திரளாக வந்துள்ளதாகவும் கூறி நெகிழ்ந்தார்.


