News August 10, 2025

நாளை வங்கிக் கணக்கில் பயிர்க் காப்பீட்டு தொகை

image

PM ஃபசல் பிமா திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை டெபாசிட் செய்யப்படும். இதற்காக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ₹3,200 கோடி தொகையை விடுவிப்பார். நாடு முழுவதும் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், அதிகபட்சமாக ம.பி.,க்கு ₹1,156 கோடி, ராஜஸ்தானுக்கு ₹1,121 கோடி, சத்தீஸ்கருக்கு ₹150 கோடி, இதர மாநிலங்களுக்கு ₹773 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

CM தலைமையில் இன்று கூடும் அமைச்சரவை

image

CM ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இம்மாத இறுதியில் CM, தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல உள்ளதால், அதுபற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

News August 13, 2025

சிம்ம முகத்துடன் காட்சி தரும் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி!

image

கும்பகோணம் அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி சிம்ம முகம், 18 கரத்துடன் காணப்படுகிறாள். கவுரவர்களிடம் தோற்று காட்டுக்கு சென்ற பஞ்ச பாண்டவர்கள் நாட்டை மீட்க, இங்கு வந்து யாகம் வளர்த்து பிரத்யங்கிரா தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்றளவும் அமாவாசை தோறும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டால் மன தைரியம் கிடைக்கும். SHARE IT.

News August 13, 2025

கைதுக்கு முன்பே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பொன்வசந்த்

image

சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவரும், திமுகவின் முக்கிய முகமாக இருந்தவருமான பொன்வசந்த் நேற்று கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதற்கு இதுவே சான்று என்று அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், பொன்வசந்த் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவுடன், கைது நடவடிக்கைக்கு முன்னரே, அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக திமுகவினர் பதிலளித்து வருகின்றனர்.

error: Content is protected !!