News August 11, 2025

இன்று வங்கிக் கணக்கில் பயிர்க் காப்பீட்டு தொகை

image

PM ஃபசல் பிமா திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இன்று டெபாசிட் செய்யப்படும். இதற்காக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ₹3,200 கோடி தொகையை விடுவிக்கிறார். நாடு முழுவதும் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், அதிகபட்சமாக ம.பி.,க்கு ₹1,156 கோடி, ராஜஸ்தானுக்கு ₹1,121 கோடி, சத்தீஸ்கருக்கு ₹150 கோடி, இதர மாநிலங்களுக்கு ₹773 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 11, 2025

அம்பேத்கர் பொன்மொழிகள்

image

*மற்றவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்த நற்பெயர் உனக்கு வேண்டாம். *வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். *அறிவைத் தேடி ஓடுங்கள்; நாளைய வரலாறு உங்கள் நிழலாகத் தேடி ஓடிவரும்.

News August 11, 2025

2 Voter ID வைத்திருந்த துணை முதல்வர்.. ECI நோட்டீஸ்

image

தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், வரும் 14-ம் தேதிக்குள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிஹாரில் சமீபத்தில் தான் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) செய்யப்பட்டது.

News August 11, 2025

இந்த முறை கப் நமக்கு தான்: கங்குலி

image

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். துபாய் ஆடுகளங்களில் இந்தியாவை வீழ்த்துவது கடினமான விஷயம் எனவும், கோலி, ரோஹித் ODI-களில் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்திருப்பதால், அவர்களுக்கு BCCI தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், கில் எதிர்காலத்தில் ரசிகர்களின் நம்பிக்கையை சுமந்து செல்லும் கேப்டனாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!