News April 14, 2024
அதிமுகவை விமர்சிப்பவர்கள் காணாமல் போவார்கள்

அதிமுகவைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். ஆத்தூர் பிரசாரத்தில் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட, நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குரல் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், விளம்பரம் தேவை என்பதற்காக, ஒற்றை செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றி வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
Similar News
News January 20, 2026
சூழ்ச்சிக்கு பலியாகாதீர்கள்: CM ஸ்டாலின்

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்களை CM ஸ்டாலின் வழங்கியுள்ளார். கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காதவர்கள் சிலர் இருக்கதான் செய்வார்கள் என்றும், அவர்கள் தேவையில்லாத கருத்துகளை கூறி கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் அந்த சூழ்ச்சியில் சிக்கி பலியாகிவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News January 20, 2026
கவர்னர் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன்

சட்டமன்றத்தை அவமதித்த கவர்னரின் போக்கை வன்மையாக கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மரபை மீறி தேசிய கீதத்தை துவக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்கவாதம் என்றும், கவர்னரின் செயல் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான ஒவ்வாமையின் வெளிப்பாடு எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் குடியரசு நாளை ஒட்டி கவர்னரின் தேநீர் விருந்தில் விசிக இந்தாண்டும் பங்கேற்காது என்பதையும் அறிவித்துள்ளார்.
News January 20, 2026
இரவில் தமிழக மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது. மீனவர்களின் விசைப்படகுகளையும் அவர்கள் சிறைபிடித்துள்ளனர். கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல போராட்டங்களை நடத்தியும் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை என்பதே மீனவர்களின் வேதனைக் குரலாக உள்ளது.


