News April 3, 2025
அணி மாறும் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சவுதியின் ‘அல் நாசர்’ அணியில் இருக்கும் ரொனால்டோ, கிளப் உலககோப்பை தொடரில் வேறோரு அணிக்காக விளையாட இருக்கிறார். ‘பிபா’ அணிகளின் ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள் மற்ற கிளப் அணிகள் சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கவுள்ளது. இதன் காரணமாகவே, ரொனால்டோ தனது ‘அல் நாசர்’ அணி, ஒப்பந்ததை இன்னும் புதுப்பிக்காமல் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவர் எந்த அணிக்காக களமிறங்குவார் என நீங்க நினைக்கிறீங்க?
Similar News
News March 26, 2026
எரிவாயு நெருக்கடி.. அர்ஜென்டினாவின் ஆதரவு

மேற்கு ஆசியப் போரினால் இந்தியாவில் ஏற்பட்ட LPG பற்றாக்குறையை ஈடுசெய்ய அர்ஜென்டினா முன்வந்துள்ளது. 2026-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், இந்தியாவுக்கு 50,000 டன் எரிவாயுவை அனுப்பியுள்ளது. இது கடந்தாண்டு ஏற்றுமதியின் மொத்த அளவை விட 2 மடங்குக்கும் அதிகமாகும். சுமார் 20,000 கி.மீ. பயணம், அதிக போக்குவரத்து செலவுகள் இருந்தும், இந்தியாவின் எரிசக்தி தேவைக்கான தனது பங்களிப்பை அர்ஜென்டினா அதிகரித்துள்ளது.
News March 26, 2026
மதுரையில் 600 டீ கடைகள் மூடல்

மதுரை மாநகரில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 600 டீ கடைகளை மூடியுள்ளனர். இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடை நடத்துபவர்கள் சிலிண்டரை அதிக விலை கொடுத்து வாங்கி வருவதாகவும், உணவு தொழில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் மாநகர் டீ கடை சங்கத்தின் துணை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் சிறிய அளவிலான கடைகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
News March 26, 2026
வந்தே மாதரம் பாடுவது காட்டாயமல்ல: சுப்ரீம் கோர்ட்

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிமுறைகளில், அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அது ஒரு அறிவுறுத்தல் மட்டுமே, அதை பின்பற்றாதவர்களுக்கு எந்தவித தண்டனையும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.


