News September 26, 2024
நில அபகரிப்பில் ஈடுபட்டால் கிரிமினல் வழக்கு: TN அரசு

போலி ஆவணத்தை பயன்படுத்தி நீர்நிலைகள், காலியான அரசு நிலங்களை அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க TN அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டோரை கண்டுபிடித்து கிரிமினல் வழக்குப்பதிய வேண்டும், நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 12, 2025
தொடரும் போர்! மோடியிடம் கோரிக்கை வைத்த ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் தாக்குதல் குறித்து PM மோடியுடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசியுள்ளார். போர் நிலவரம் குறித்து ஜெலன்ஸ்கியிடம் கேட்டறிந்ததாக X தளத்தில் தெரிவித்த மோடி, போரை நிறுத்த இந்தியாவால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
SPORTS ROUNDUP: WC ODI-யை வெல்வோம்.. ஹர்மன்பிரீத் கவுர்

◆சின்சினாட்டி ஓபன்: 3 மணி நேரம் நடந்த போட்டியில் அரினா சபலேங்கா(பெலாரஸ்) (7-3) 4-6 7-6 (7-5) என்ற செட் கணக்கில் போராடி எம்மா ராடுகானுவை (பிரிட்டன்) வீழ்த்தினார்.
◆மகளிர் உலக கோப்பையை கண்டிப்பாக வெல்வோம்.. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உறுதி.
◆WC T20 2026 தொடருக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானம் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
◆ கர்நாடகாவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. 80,000 இருக்கை வசதி இருக்கும்
News August 12, 2025
திமுகவுக்கு எதிராக கேள்வி எழுப்பிய கே.பாலகிருஷ்ணன்

ஆணவக்கொலைக்கு எதிரான சட்டத்தை திமுக அரசு இயற்றாதது ஏன் சிபிஎம் கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது புரியாத புதிராக இருப்பதாக கூறிய அவர், இத்தகைய செயல் தமிழக அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித் தராது என்றார். மேலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து EPS பேசாதது ஏன் என்று கேட்ட அவர், சொந்த முகவரியை இழந்து நிற்கிற கட்சி என்றால் அது அதிமுகதான் என விமர்சித்தார்.