News March 30, 2024
225 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள்

225 மக்களவை எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு செய்தது. அதில் 225 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதும், அதில் 29% பேர் மீது கொலை, கொலை முயற்சி, இனக் கலவரம் தூண்டியது, கடத்தல் என கடுமையான வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
சனிக்கிழமை மட்டும் இந்த தவறை செஞ்சுடாதீங்க

சனிக்கிழமைகளில் சில விஷயங்களை செய்தால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீர்கள் என ஐதீகங்கள் சொல்கின்றன. சனிக்கிழமையன்று துடைப்பம், எண்ணெய், கத்திரிக்கோல் வாங்கக்கூடாது. அத்துடன், பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். இதனால் உங்கள் செல்வ வளம் குறையும் எனவும், உடல்நலனில் பாதிப்புகள் வரலாம் எனவும் நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் நீங்கள் எப்படி வழிபடுவீங்க?
News November 8, 2025
தமிழ்நாட்டில் இருந்து இந்த சட்டமன்ற தொகுதி நீக்கமா?

ECI-ன் அதிகாரப்பூர்வ ‘ECINET’ செயலியில் உடுமலை தொகுதி(125) இடம் பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்த்து வருகின்றனர். ஆனால், திருப்பூர் மாவட்ட பட்டியலில் ‘Search your name in voter list’-ல் அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர்(வ), திருப்பூர்(தெ) மட்டுமே உள்ளன.
News November 8, 2025
பெட்டிக் கடைகளில் SIR படிவங்கள் விநியோகம்: அதிமுக

SIR படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் கொடுத்து விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக MP இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். ஆனால், கடைகளில் SIR படிவம் விநியோகம் செய்தால், எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இதற்கு பின்னால் DMK இருப்பதாக விமர்சித்துள்ளார்.


