News October 16, 2025
பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 68% அதிகரிப்பு

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 68% அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையில் பதிவான வழக்குகளின் படி, கடந்த 2019-ல் பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள் 1,175-ஆக இருந்த நிலையில், 2023-ல் அது 1,969-ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 6,500-க்கும் மேற்பட்ட வழக்குகள், ஆரம்ப கட்ட விசாரணையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
Similar News
News October 16, 2025
இன்று உலக உணவு தினம்

1945-ல் ஐநா, உணவு மற்றும் வேளாண் அமைப்பை நிறுவியதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்.16-ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வுலகில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் எல்லோரும் செயல்பட வேண்டும் என்பதை இந்த தினம் உணர்த்துகிறது. அதே நேரத்தில், உணவு வீணாவதை தடுக்க ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையை நாம் தேர்ந்தெடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
News October 16, 2025
2027 உலகக் கோப்பையில் விராட்: தினேஷ் கார்த்திக்

2027 உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஆஸி.,க்கு எதிரான தொடரில் விராட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லையென்றால், உலகக் கோப்பையில் விளையாடுவது கடினம் என்று கூறப்படும் நிலையில் DK இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், லண்டனில் அவர் கடுமையாக பயிற்சி எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
News October 16, 2025
மன்னிப்பு கேட்டார் மாரி செல்வராஜ்

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘பைசன்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். தமிழ்நாட்டை கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியதால் தான் இப்படி பெயர் வைத்ததாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், தன்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் ‘காளமாடன்’ என்றுதான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.