News February 12, 2025

தமிழகத்தில் SC, ST மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

image

தமிழகத்தில் 2020-22 கால கட்டங்களில் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது, லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டு 1,274 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது 2021ஆம் ஆண்டு 1,377ஆக அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில், 15,368 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

Similar News

News February 12, 2025

தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

image

அயோத்தி ராம ஜென்ம பூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்துமதச் சடங்குகள், வேதங்களில் சிறந்தவரான அவர், தன் வாழ்நாளை ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார். ஆன்மிக மற்றும் சமூக வாழ்க்கையில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக்கூரப்படும் என்று உருக்கமாக தன் இரங்கல் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

News February 12, 2025

சபரிமலையில் நடை திறப்பு

image

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வரும் 17 ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்காக செல்லலாம். மகர சங்கராந்தி முடிந்தும் கடைசி நாள் வரை பக்தர்கள் அதிகமாக திரண்டதால், மாத பூஜைக்காக திறந்திருக்கும் அடுத்த 5 நாட்களிலும் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 12, 2025

அமைச்சராவதில் SB-க்கு ஏன் இந்த அவசரம்? SC கேள்வி

image

ஜாமின் கிடைத்தவுடனே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன் என்று அவர் தரப்பிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அவர் மீண்டும் அமைச்சரானதை எதிர்த்து வித்யா குமார் என்பர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சியங்களாக இருக்கும் போது அமைச்சராக தொடர்வது தார்மீகமா? அமைச்சராக தொடர SB விரும்புகிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

error: Content is protected !!