News May 29, 2024

அடுத்தடுத்து 4 பேர் வெட்டிக்கொலை

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளதால், சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய தீபக் ராஜா படுகொலை சம்பவம் அடங்குவதற்குள், தலைநகர் சென்னையில் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும் காவல்துறை என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News

News August 24, 2025

செல்போன் ரீசார்ஜ்.. இந்த ஆஃபரை பாருங்க

image

ஜியோ, ஏர்டெல் தங்களது ₹249 பேஸிக் ரீசார்ஜ்களை ரத்து செய்துவிட்டதால் பட்ஜெட்வாசிகள் பலரும் BSNL-க்கு படையெடுத்து வருகின்றனர். MNP மூலம் பலரும் BSNL உடன் இணைந்து வருகின்றனராம். காரணம், BSNL-ல் உள்ள ₹599 திட்டத்தில் 84 நாள்களுக்கு தினந்தோறும் 3GB டேட்டா, அது தீர்ந்த பிறகு 40kbps ஸ்பீடில் இணைய வசதி, 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகள் உள்ளன. இதனால் மாதத்திற்கு ₹200 மட்டுமே ஆகுமாம். சூப்பர்ல..!

News August 24, 2025

‘ஓம்’ என ஓசை எழுப்பும் தொந்தி இல்லாத விநாயகர்!

image

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் வருவதாக கூறுகின்றனர். இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல், ஓம் வடிவத்தில் குறுகி காணப்படுவதால், ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். ஓம் என்ற சத்தம் கேட்பதால், அவரை ஓங்கார கணபதி என்றும் அழைக்கின்றனர். சுந்தரர் இத்தல இறைவனிடம் பதிகம் பாடி, பொன் பொருளை பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

News August 24, 2025

தமிழகம் வரும் பஞ்சாப் முதல்வர்

image

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆக.26-ல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இதற்கான விழாவில் கலந்துகொள்ளுமாறு பஞ்சாப் CM பகவந்த் மானுக்கு, திமுக MP வில்சன் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். இதன் பேரில் அவர் இந்நிகழ்வில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு பெற்றோர், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!