News February 28, 2025

பொதுத்தேர்வில் கிரிக்கெட் கேள்வி

image

பத்தாம் வகுப்பு CBSE (இந்தி) பொதுதேர்வில் மாணவர்களுக்கு கிரிக்கெட் குறித்து கேட்கப்பட்ட கேள்வி கவனத்தை ஈர்த்துள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதுகுறித்து, விரிவாக கட்டுரை எழுதச்சொல்லி பொதுத்தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பார்க்காத மாணவர்கள் எப்படி எழுதுவார்கள் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News

News February 28, 2025

பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

image

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1இல் தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, மாநிலம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

News February 28, 2025

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பட்லர்

image

இங்கிலாந்து ODI மற்றும் T20 தொடர்களில் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். T20, ODI தொடர்களில் AUS மற்றும் AFG அணிகளிடம் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்ததால், பட்லரின் கேப்டன்சி விமர்சிக்கப்பட்டது. SAக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியே, கேப்டனாக அவரது கடைசி போட்டியாகும்.

News February 28, 2025

வெளுத்து வாங்கும் கனமழை.. AUS-AFG போட்டி நிறுத்தம்

image

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வந்த ஆஸி., ஆப்கன் இடையிலான ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. லாகூரிலுள்ள மைதானத்தில் முதலில் விளையாடிய ஆப்கன் அணி, 273 ரன்களை எடுத்தது. 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸி., அணி 12.5 ஓவர்களில் 109/1 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பிட்ச் முழுவதும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

error: Content is protected !!