News April 20, 2024

நிஜ ‘ஜெய்பீம்’ வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு

image

கடலூர் மாவட்டத்தில் 1993 இல் போலீசாரின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணு குடும்பத்திற்கு இறுதி இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் தமிழக அரசின் நிலையை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த உண்மை சம்பவத்தைத் தழுவி ‘ஜெய் பீம்’ திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 12, 2025

தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவின் சதி: பாக்., PM

image

<<18258662>>பாகிஸ்தானில் கார் வெடித்து<<>> 12 பேர் உயிரிழந்த நிலையில், இது தற்கொலைப்படை தாக்குதல் என அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவின் சதி இருப்பதாகவும், ஆப்கனை தளமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் அடிமையான TTP தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.

News November 12, 2025

₹4 கோடிக்கு கார் வாங்கிய அர்ஷ்தீப்!

image

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், மெர்சிடஸ் பென்ஸ் AMG G63 Wagon மாடல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். 585 குதிரை திறன் கொண்ட இந்த காரின் விலை ₹4 கோடியாகும். இது, 0-100 kmph வேகத்தை வெறும் 4.3 விநாடிகளில் எட்டும். அர்ஷ்தீப்பின் பவுலிங் வேகத்தை போன்றே காரை வாங்கியுள்ளதாக, நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

News November 12, 2025

AI கேர்ள் ஃபிரண்ட்களுடன் எச்சரிக்கையாக இருங்கள்!

image

AI கேர்ள் ஃபிரண்ட்கள், Anime-Style சாட்பாட்களுடன் எச்சரிக்கையாக இருக்குமாறு Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். மனிதர்களுடன் உறவுகளை மேம்படுத்த சில AI நிறுவனங்கள் சாட்பாட்களை உருவாக்குகின்றன. அதனுடன் உரையாடும் அனைத்தையும் அவை ஞாபகம் வைத்துக் கொள்ளும். அதனுடன் ஆழமான உறவை பேணுவது மனிதர்களின் சிந்தனையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!