News April 20, 2024
நிஜ ‘ஜெய்பீம்’ வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் 1993 இல் போலீசாரின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணு குடும்பத்திற்கு இறுதி இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் தமிழக அரசின் நிலையை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த உண்மை சம்பவத்தைத் தழுவி ‘ஜெய் பீம்’ திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 14, 2025
Coolie Review: மாஸ் காட்டினாரா லோகேஷ்?

‘கூலி’ படம் அதிகாலையிலேயே வெளிமாநிலங்கள் & வெளிநாடுகளில் ரிலீஸாகிவிட்டது. படத்தின் டைட்டில் கார்டிலேயே ரசிகர்களை விசில் பறக்க வைத்துள்ளார் லோகேஷ். ரஜினியின் எனர்ஜி குறையாத நடிப்பு சிலிர்க்க வைக்கிறது. இடைவேளை காட்சி எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது. வழக்கம்போல் அனிருத் தனது இசையால் அரங்கம் அதிர வைத்துள்ளார் என்றே சொல்லலாம். மொத்தத்தில் ‘கூலி’ செம ட்ரீட் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
News August 14, 2025
அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்தது திமுக: EPS

அதிமுக என்ன செய்தது என்பதை சிறுபான்மையினர் உணர வேண்டும் என்று EPS கூறியுள்ளார். வாணியம்பாடியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு அப்துல் கலாம் நின்றபோது அவருக்கு எதிராக திமுக வாக்களித்ததாக சுட்டிக்காட்டினார். சிறுபான்மை மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், அடுத்து அதிமுக ஆட்சி அமையும் என்பதால் நீங்கள் பயப்பட வேண்டாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
News August 14, 2025
ஹிந்தி பயன்பாட்டை அதிகரியுங்கள்: தெற்கு ரயில்வே

நாளை நாட்டின் 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், இன்று முதல் செப்.15 வரை ரயில்வே அலுவலகப் பணிகளில் ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அஞ்சல் வழிச் செய்திகள், ரயில்வே உத்தரவுகள் உள்ளிட்டவற்றை ஹிந்தியில் வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் நோக்கம் என்னவென்பது குறித்த தகவல்கள் இல்லை.