News April 26, 2024
மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படிக் விநியோகிப்பீர் என மத்திய அரசிடம் ஐகோர்ட் வினவியுள்ளது. தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேஷன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியது. அப்போது, அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என வினவிய கோர்ட், அது பற்றி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
Similar News
News November 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 14, ஐப்பசி 28 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம் ▶சிறப்பு: சுக்கிரன் வழிபாட்டு நாள். ▶வழிபாடு: அபிராமி அந்தாதி பாடி அம்மனை வழிபடுதல்.
News November 14, 2025
காதல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது: அஜய் தேவ்கன்

இன்றைய இளம் தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் ‘LOVE’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதாக நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். இதனால், காதல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டதாகவும், காதலின் உண்மையான அர்த்தம், அந்த சொல்லின் ஆழம் இளம் தலைமுறையினருக்கு புரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அவரது மனைவி <<18272316>>கஜோல்<<>>, திருமணத்திற்கு Expiray Date மற்றும் Renewal ஆப்ஷன் வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
News November 14, 2025
யோசித்து கூட பார்க்காத வகையில் தண்டனை: அமித்ஷா

டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். இனி இது போன்ற சம்பவத்தை செய்ய வேண்டும் என யாரும் எண்ணாத வகையில், அந்த தண்டனை மிகக்கடுமையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்து கொள்ளாது என்பதை உலகிற்கு உணர்த்தும் செய்தியாக அது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


