News April 26, 2024

மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படிக் விநியோகிப்பீர் என மத்திய அரசிடம் ஐகோர்ட் வினவியுள்ளது. தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேஷன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியது. அப்போது, அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என வினவிய கோர்ட், அது பற்றி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

Similar News

News February 3, 2026

தொகுதி மாறுகிறாரா சீமான்?

image

தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் கட்சியின் தலைவர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், 2021 தேர்தலில் திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான், இந்த முறை சொந்த மாவட்டத்தை குறிவைத்துள்ளாராம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாகவும், பிப்.21-ல் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News February 3, 2026

படுத்த படுக்கையாகிவிட்டேன்: நடிகர் அரவிந்த்சாமி

image

90-களில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர் அரவிந்த்சாமி, திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் படுத்த படுக்கையாக இருந்ததாக அரவிந்த்சாமி கூறியுள்ளார். 2005-ம் ஆண்டு நடந்த விபத்து தன்னை ஒன்றரை வருடம் முடக்கிவிட்டதாக தெரிவித்தார். அறுவை சிகிச்சை வேண்டாம் என முடிவெடுத்ததால், அந்த வலி நீண்ட நாள் தொடர்ந்ததாகவும், பிறகு ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்ததாகவும் கூறினார்.

News February 3, 2026

BREAKING: மீண்டும் மழை வெளுத்து வாங்கும்

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றுமுதல் 3 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் இன்றும், தென் & டெல்டா மாவட்டங்களில் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். மேலும், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உஷார் மக்களே!

error: Content is protected !!