News August 2, 2024
செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அறிவிப்பு

செந்தில்பாலாஜி வழக்கில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரிய மனு மீது, இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
இரும்பு கம்பியை சொருகியது போல் வலி: திருமா உருக்கம்

கட்சியின் வளர்ச்சிக்காக, தாங்க முடியாத உடல் வலியையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை கட்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், இதன் விளைவாக முட்டி வலி, கால் வலி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கழுத்தில் இருந்து இடுப்பு வரை இரும்பு கம்பியை சொருகி வைத்தது போல் உள்ளதாக உருக்கத்துடன் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
News December 1, 2025
இந்து மதத்தில் தவறாக புரிந்து கொள்ளப்படும் வார்த்தை!

‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ என்றவுடன், இந்து மதத்தில் 33 கோடி தெய்வங்கள் உள்ளது என்றே பலரும் எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் கோடி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு கோடி(Crore) & வகை என அர்த்தங்கள் வரும். இந்த ‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ வாக்கியத்தில் வகை அர்த்தம்தான் சொல்லப்படுகிறது. 33 தேவர்கள் அதாவது, 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் & பிரஜாபதி ஆகியோர் அடங்குவர்.
News December 1, 2025
அமெரிக்காவில் ‘Reverse migration’ திட்டம்: டிரம்ப் உறுதி

வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டை அடுத்து, USA-வின் குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கி வரும் <<18410987>>டிரம்ப்,<<>> ‘Reverse migration’ திட்டத்தை அறிவித்துள்ளார். அதாவது, USA-வில் இருக்கக்கூடாத அனைத்து மக்களும் வெளியேற்றப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், USA-க்கு அடைக்கலம் தேடி சென்ற <<18401691>>ஆப்கன்<<>> உள்ளிட்ட <<18409306>>பல்வேறு நாடுகளை<<>> சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.


