News August 2, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அறிவிப்பு

image

செந்தில்பாலாஜி வழக்கில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரிய மனு மீது, இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

விஜய்யை விட இவருடைய தாக்கம் பெருசு: தமிழிசை

image

மதுரையில் தவெகவின் 2வது மாநாடு நடந்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள தமிழிசை விஜய்யின் மாநாட்டை விட நாளை அமித்ஷா பங்கேற்கவுள்ள நெல்லை பூத் கமிட்டி மாநாடு தமிழகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். மேலும், அமித்ஷா வெற்றியை நிரூபித்து காண்பித்தவர் எனவும், விஜய் இன்னும் அரசியல் வெற்றியை நிரூபித்து காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

மாநாட்டு மேடையில் விஜய் சொன்ன Kutty Story..

image

ஒரு ராஜா தளபதியை தேர்ந்தெடுக்க 10 பேரிடம் விதைகளை கொடுத்தார். அதில் ராஜாவை ஏமாற்ற நினைத்த 9 பேர் வேறு விதையை மரமாக வளர்த்து கொண்டுவந்தனர். ஆனால் அந்த ராஜா விதையோடு வந்த ஒருவனை தான் தளபதியாக தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் அவர் கொடுத்த விதைகள் வேகவைக்கப்பட்டவை, அது வளராது என கூறி கதையை முடித்துக்கொண்ட விஜய், உண்மையான ஒருவரையே தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்தார்.

News August 21, 2025

SPACE: ஜூபிடரில் உள்ள RED DOT மர்மம்..என்ன தெரியுமா?

image

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளின் மேற்பரப்பில் ஒரு தனித்துவமான சிவப்பு புள்ளியை நாம் கண்டிருப்போம். இதை என்னவென்று நீங்கள் யோசித்தது உண்டா? வியாழனில் அமைந்துள்ள இந்த சிவப்பு புள்ளி ஒரு சாதாரண புள்ளி அல்ல. இது 350 நூற்றாண்டுகளுக்கு மேலாக சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சுழல் என்கின்றனர் விஞ்ஞானிகள். இச்சுழல் சுமார் 16,000 கிமீ நீளமும் 12,000 கிமீ அகலமும் கொண்டது. SHARE.

error: Content is protected !!