News March 24, 2025
பார்க்கில் பிணமாக தொங்கிய ஜோடி… தலைநகரில் அதிர்ச்சி

பூங்காவில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும்போது, அங்குள்ள மரத்தில் 2 பேர் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? இந்த சம்பவம் டெல்லி மான் பூங்காவில் நடந்துள்ளது. 17 வயது சிறுவன், சிறுமி ஆகியோர் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றியுள்ளனர். தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News March 25, 2025
தொடர் விடுமுறை: குவிந்த கூடுதல் பஸ்கள்!

ரம்ஜான் பண்டிகை வரும் 31ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ளனர். இவர்களின் வசதிக்காக, கிளாம்பாக்கத்தில் இருந்து 990 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, கோயம்பேட்டில் இருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 100 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
News March 25, 2025
உங்களுக்கும் இதே மாதிரி ஃபீல் ஆகுதா?

சோர்வு, தலைச்சுற்றல், கை, கால்கள் நடுக்கம், இருமல், சளி போன்றவற்றால் பலரும் கடந்த ஒரு வாரமாக அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், பருவகாலம் மாற்றம் மற்றும் சூரிய வெப்ப தாக்கம் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உடலில் நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக் கொள்ளவும், மிகவும் முடியவில்லை என்றால் டாக்டரை அணுகவும் அறிவுறுத்துகின்றனர். உங்களுக்கும் இதே ஃபீலிங் இருக்கா?
News March 25, 2025
இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகளுக்கு இங்கி. தடை

2009ல் LTTEக்கு எதிரான போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் உட்பட 4 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடை விதித்துள்ளது. முன்னாள் ராணுவ தளபதிகள் ஷவேந்திர சில்வா, கரண்ணகோடா, ஜகத் ஜெயசூர்யா, LTTEயில் இருந்து பின்னர், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு துணை அமைச்சரான விநாயகமூர்த்தி ஆகியோர் அந்நாட்டிற்கு வர தடை மற்றும் அவர்களது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.