News April 14, 2025
ராணுவம், போலீஸ் இல்லாத நாடுகள்

ஐஸ்லாந்தில் நிலையான ராணுவம் இல்லை. NATO உறுப்பினர் என்பதால், தேவைப்பட்டால் USA பாதுகாப்பு வழங்கும். செலவுகள் அதிகமானதால் 1868-ல் லிச்சென்ஸ்டீன் ராணுவத்தை ஒழித்தது. அடிப்படை பாதுகாப்பிற்காக ஒரு சில காவலர்கள் மட்டுமே உள்ளனர். வாடிகனில் ராணுவம் இல்லை. போப்பாண்டவரை பாதுகாக்க சுவிஸ் காவலர்கள் மட்டுமே உள்ளனர். அன்டோராவில் ராணுவம் இல்லாததால், பாதுகாப்பை ஸ்பெயினும், ஃபிரான்சும் பகிர்ந்து கொள்கின்றன.
Similar News
News October 25, 2025
NATIONAL ROUNDUP: தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

*ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளன. *காற்று மாசு அதிகரிப்பால், டெல்லியில் காற்று சுத்திகரிப்பான், முகக்கவசம் விற்பனை அதிகரித்துள்ளது. *ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
* ₹256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது
News October 25, 2025
உலகின் 8-வது கண்டம் தெரியுமா?

உலகின் 8வது கண்டத்தை புவியியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நியூசிலாந்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நிலப்பரப்பின் பாறை மாதிரிகளை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருப்பதாகவும், புதிய கண்டத்தின் 94% பகுதிகள் நீருக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக 49 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த கண்டத்துக்கு Zealandia என்றும் பெயர் வைத்துள்ளனர். SHARE IT
News October 25, 2025
கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய அரசு நிதி

கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, மத்திய அரசு தரப்பில் ₹2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களின் வங்கி கணக்கில் ₹2 லட்சத்தை மத்திய அரசு செலுத்தியுள்ளது. ஏற்கெனவே TN அரசு ₹10 லட்சமும், விஜய் ₹20 லட்சமும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.


