News August 24, 2024

பிளாஸ்டிக் கரன்சி பயன்படுத்தும் நாடுகள்

image

ஆஸி., நியூசிலாந்து, கனடா, வியட்நாம் உள்பட 40 நாடுகளில் பாலிமர் பிளாஸ்டிக் <<13932692>>கரன்சி<<>> பயன்படுத்தப்படுகிறது. ஆஸி. முதல் முறையாக 1998ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கரன்சிகளை அறிமுகம் செய்தது. கள்ள நோட்டுகளை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவும் இந்த கரன்சி நோட்டுகள் உருவாக்கப்படுகின்றன. அதே போல, எளிதில் கிழியாது என்பதால், பிரின்டிங் செலவும் குறைகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் கரன்சியை எதிர்பார்க்கிறீர்களா?

Similar News

News December 1, 2025

கண்ணாடி பாட்டில் மூடியில் 21 மடிப்புகள் இருப்பதன் காரணம்!

image

இங்கு காரண காரியம் இன்றி எதுவும் கிடையாது. கண்ணாடி ஜூஸ் பாட்டில்கள் & பீர் பாட்டில் 21 மடிப்புகள் இருப்பதற்கும் காரணம் உண்டு. சோடாக்களில் அதிக கார்பன் டை ஆக்சைடு இருப்பதால், கண்ணாடி பாட்டில் அந்த அழுத்ததை தாங்க, மூடி இறுகலாக இருக்க வேண்டும். இதனால், பல கட்ட சோதனைக்கு பிறகு, 21 மடிப்புகள் இருந்தால் மட்டுமே மூடி அழுத்தமாக இருக்கும் என கண்டறியப்பட்டு சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

News December 1, 2025

பார்லிமென்ட்டில் டிராமா பண்ண கூடாது: PM மோடி

image

பார்லிமென்ட் டிராமா செய்யும் இடமல்ல; அது விவாதம் நடத்துவதற்கான இடம் என PM மோடி தெரிவித்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அவைக்குள் அமளி செய்யக்கூடாது; அதனை வெளியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இளம் MP-க்கள் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். உங்கள் கருத்து?

News December 1, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

கிருஷ்ணகிரியில் அதிமுகவில் இருந்து விலகிய 2,000 பேர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடந்த மாதம் 13-ம் தேதி திமுகவில் இணைந்த அதிமுகவின் Ex ஓசூர் மாநகர கிழக்கு மண்டல குழுத் தலைவர் புருசோத்தமரெட்டி தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. மேலும், கே.பி.முனுசாமியின் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை குறிவைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!