News August 24, 2024

பிளாஸ்டிக் கரன்சி பயன்படுத்தும் நாடுகள்

image

ஆஸி., நியூசிலாந்து, கனடா, வியட்நாம் உள்பட 40 நாடுகளில் பாலிமர் பிளாஸ்டிக் <<13932692>>கரன்சி<<>> பயன்படுத்தப்படுகிறது. ஆஸி. முதல் முறையாக 1998ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கரன்சிகளை அறிமுகம் செய்தது. கள்ள நோட்டுகளை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவும் இந்த கரன்சி நோட்டுகள் உருவாக்கப்படுகின்றன. அதே போல, எளிதில் கிழியாது என்பதால், பிரின்டிங் செலவும் குறைகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் கரன்சியை எதிர்பார்க்கிறீர்களா?

Similar News

News October 23, 2025

ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இவ்வளவு வசூலா?

image

கோடிக்கணக்கான மக்களின் பார்வையை பெறும் பதிவுக்கு, பிரபலங்கள் கோடியில் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடைய ஒவ்வொரு பதிவும், உலகளாவிய விளம்பரமாக உள்ளது. எந்த பிரபலம், எவ்வளவு பெறுகிறார், என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் யாரை பாலோ செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 23, 2025

நகை கடன் வாங்கியோருக்கு… முக்கிய தகவல்

image

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால், நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் (வாடிக்கையாளர்) முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.

News October 23, 2025

ஆந்திர அரிசி இறக்குமதி: சீமான்

image

தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பெயர்தான் திராவிட மாடலா என்றும் சாடிய அவர், முதல்வருக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!