News April 10, 2024
இந்தியர்களுக்கு நாடோடி விசா வழங்கும் நாடுகள்!

வெளிநாடுகளில் தங்கி பணிபுரிவோருக்கு ஏற்ற டிஜிட்டல் நாடோடி விசாவை (Digital Nomad Visa) பல நாடுகள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால் வழங்குகின்றன. இந்தியர்களுக்கு ஓராண்டு வரை தங்கி பணிபுரிய இந்தோனேசியா (150 டாலர்), மொரிஷியஸ் (கட்டணமில்லை), போர்ச்சுக்கல் (90 யூரோ), ஜெர்மனி(75 யூரோ), கிரீஸ் (75 யூரோ), பஹாமாஸ் (25 டாலர்), ஸ்பெயின் (73.26 யூரோ), செஷல்ஸ் (10 யூரோ) கட்டணத்தில் இந்த விசாவை வழங்குகின்றன.
Similar News
News July 8, 2025
மழைக் காலத்தில் இதை கவனியுங்க…

பைக், கார் வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வண்டிக்கு தேவையான காப்பீடு அம்சங்களை உள்ளடக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி (காலாவதி ஆகாமல்) இருப்பதை உறுதிச் செய்துகொள்ளுங்கள். மழையில் வாகனம் அழுக்காக போகிறது என்பதால், மழை முடிந்தபின் சர்வீஸ் செய்துகொள்ளலாம் என அசட்டையாக இருந்தால், பழுது ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருங்கள்!
News July 8, 2025
ரூபாய் நோட்டு அச்சிட இதெல்லாம் பாக்கணும்

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை பின்வரும் காரணிகள் அடிப்படையில் தான் கணக்கிட்டு அச்சடிக்கிறது: *பழைய நோட்டுகளை அகற்றுதல் *மாற்றீடு செய்யும் தேவை *இருப்பு தேவை *பொருளாதார வளர்ச்சி விகிதம் *உற்பத்தி விகிதம் *கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை தடுத்தல் *தங்கம் இருப்பு உள்ளிட்ட காரணிகளை ஆராய்ந்து, எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அளவை ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.
News July 8, 2025
முடிவுக்கு வரும் மாறன் சகோதரர்களின் பிரச்னை?

<<16753727>>மாறன் சகோதரர்களிடையேயான சொத்துப் பிரச்னையில்<<>> CM ஸ்டாலின் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் நேரில் சந்தித்த அவர், ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் செயல்பட அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தம்பி தயாநிதி மாறனுக்கு கூடுதல் பங்குகளை விட்டுக்கொடுக்க கலாநிதி மாறன் முன்வந்திருக்கிறாராம். ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.