News June 4, 2024

39 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி, 39 மையங்களில் நடைபெற உள்ளன. இந்த மையங்களில் 1 சட்டமன்ற தொகுதிக்கு 1 அறை வீதம், 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் வீதம், 3,300 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். தேவையான இடங்களில் 14க்கும் அதிகமான மேஜைகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்று வாரியாக வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படும்.

Similar News

News September 21, 2025

ஊருக்கு போனவங்க உடனே வாங்க: கதறும் USA கம்பெனிகள்

image

H-1B, H-4 விசா கொண்டுள்ள ஊழியர்கள் சொந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தால், உடனே அமெரிக்கா திரும்புமாறு அமேசான், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், அமெரிக்காவில் இருப்பவர்கள் சர்வதேச பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிரம்பின் புதிய அறிவிப்பின் படி, <<17767608>>H-1B<<>> விசா கொண்டிருப்பவர்கள், இன்று இரவு 12 மணிக்குள் அமெரிக்கா திரும்பாவிட்டால், ₹88 லட்சம் செலுத்த வேண்டும்.

News September 21, 2025

வரலாற்று சாதனை படைத்த ‘லோகா’!

image

மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி 23 நாள்களில் உலகம் முழுவதும் ₹267 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, மோகன்லால் நடித்த ‘L2 : எம்புரான்’ ₹265 கோடி வசூலித்ததே சாதனையாக கருதப்பட்டது. மோகன்லால், மம்முட்டி என பெரிய ஸ்டார்கள் இருக்க, ஒரு ஹீரோயின் முதன்மை கேரக்டரில் நடித்த படம், இவ்வளவு பெரிய வசூலை குவித்துள்ளது.

News September 21, 2025

ராகுலின் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு குழு

image

ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஆலந்தா தொகுதியில் 5,994 பேரின் பெயர்களை தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக நீக்கியதாகவும், இதுதொடர்பான ஆவணங்களையும் வழங்க மறுப்பதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அனைத்து ஆவணங்களையும் வழங்கியதாக தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்தது.

error: Content is protected !!