News June 2, 2024
அருணாச்சல், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அருணாச்சலில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளிலும், சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் தான் நடைபெற இருந்தது. எனினும், இரு மாநில பேரவைகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதால் முன்கூட்டியே எண்ணிக்கை நடக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Similar News
News September 20, 2025
செப்டம்பர் 20: வரலாற்றில் இன்று

*1857 – கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விஸ்வாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றின. முதல் இந்திய சுதந்திர போர் முடிவுக்கு வந்தது. *1878 – தி இந்து செய்தி நிறுவனம் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது. *1971- தமிழ் திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பிறந்தநாள். *1990 – இலங்கை சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டனர்.
News September 20, 2025
டீல் பேச அமெரிக்கா செல்லும் அமைச்சர்

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த சில நாள்களில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வர்த்தகம் தொடர்பாக, கடந்த 16-ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சரின் அமெரிக்க பயணம் என்பது, இருநாடுகளுக்கு இடையேயான 6-வது சுற்று வர்த்தக பேச்சுவார்த்தையாக அமைய உள்ளது.
News September 20, 2025
ஓஷோ பொன்மொழிகள்

*பயம் முடிகிற இடத்தில் வாழ்க்கைத் தொடங்குகிறது. *யாரோ ஒருவராகும் எண்ணத்தைக் கைவிடுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. உங்களிடம் மேம்படுத்த எதுவுமில்லை. விஷயம் என்னவெனில் இதை நீங்கள் உணர்ந்து, புரிந்து, ஏற்பது மட்டுமே. *காதலில் விழுவதன் மூலம் நீங்கள் குழந்தையாகவே இருக்கிறீர்கள். *உண்மை என்பது வெளியில் கண்டுபிடிக்கப்பட வேண்டியதில்லை. உள்ளூர உணரப்பட வேண்டியது.