News August 8, 2024

தமிழக முதல்வரை சந்தித்த கவுன்சிலர்

image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில், நெல்லை மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் மன்சூர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News

News January 8, 2026

நெல்லை: பள்ளி மாணவன் வெட்டிக்கொலை

image

நெல்லை பணகுடியில் சில தினங்களுக்கு முன் லெட்சுமணன் (15) என்ற பள்ளி மாணவனை சபரி ராஜன் (23) என்ற இளைஞர் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த மாணவன் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சபரி ராஜனை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்நிலையில், மாணவன் லெட்சுமணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கொலை முயற்சி வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

News January 8, 2026

நெல்லை: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீசில் வேலை ரெடி!

image

திருநெல்வேலி மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 8, 2026

நெல்லை: +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

சேரன்மாதேவியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவரது மகள் ஸ்ரீவரகோமதி (17). இவர் சேரன்மாதேவியில் உள்ள அரசு பள்ளியில் 12வது படித்து வந்தார். மாணவி பள்ளிக்கு லீவ் போட்டு பெற்றோரை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் மாணவியை பள்ளிக்கு செல்ல கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் விசாரணை.

error: Content is protected !!