News October 29, 2025
திமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்: EPS

நகராட்சி நிர்வாகத்துறை <<18140241>>பணி நியமனத்தில்<<>> நடந்த ஊழல் தொடர்பாக, பொறுப்பு DGP வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். CM ஸ்டாலின் போலீஸ் கைகளை கட்டாமல் இருக்க வேண்டும் எனவும், இளைஞர்களின் அரசுப்பணி கனவை, தங்கள் கமிஷன் கொள்ளைக்காக திமுக அரசு சிதைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்த திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் – எதிலும் ஊழல் நடந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News October 29, 2025
விசிகவுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்: திருமா

வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக கேட்கும் சீட்களை திமுக வழங்குமா என திருமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விசிகவுக்கு அதிக சீட்களை கொடுத்தால், கூட்டணிக்குள் பிரச்னை வருமோ என திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் அச்சப்படுவதாக கூறியுள்ளார். ஆனால், இதற்காக விசிக அமைதியாக இருக்காது எனவும், தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சீட்களை கேட்டுப்பெறும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News October 29, 2025
Spam Call-களுக்கு செக் வைக்க TRAI முடிவு

Spam Call-களை கட்டுப்படுத்த TRAI முக்கிய முடிவை எடுத்துள்ளது. இனி உங்களுக்கு போன் செய்பவர்களின் உண்மையான பெயர்கள், மொபைல் டிஸ்பிளேயில் தெரியவரும். இதற்கான முன்மொழிவிற்கு TRAI ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவர் சிம் கார்டு வாங்கும் போது கொடுத்த ஆவணங்களில் இருந்து இந்த ‘Calling Name Presentation’ செயல்படுத்தப்பட உள்ளது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், Truecaller போன்ற 3-ம் நிலை செயலிகள் தேவைப்படாது.
News October 29, 2025
ரஷ்மிகாவுக்கு இருக்கும் உச்சபட்ச ஆசை இதுதான்

மற்ற துறைகளை போல சினிமாவிலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக ரஷ்மிகா தெரிவித்துள்ளார். சினிமாவில் உள்ள அனைவருக்கும் குடும்பமும் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது என கூறிய அவர், குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், அதிகமாக வேலை செய்து ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டு விட்டேனே என பிற்காலத்தில் கவலைப்பட விரும்பவில்லை எனவும் பேசியுள்ளார்.


