News April 10, 2024
சர்ச்சையில் சிக்கிய மெட்ரோ ரயில் நிர்வாகம்

பெங்களூருவில் சுத்தமான ஆடை அணியாத இளைஞரை மெட்ரோ ரயிலில் ஏற அதிகாரிகள் அனுமதி மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டையின் மேல் பட்டன் அணியும்படி அறிவுறுத்திய அதிகாரிகள், சுத்தமான ஆடை அணிந்து வரும்படி வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த நபர் போதையில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்ததாகவும், பிறகு அனுமதித்ததாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News January 11, 2026
கனமழை.. 7 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் நாளை 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், குடை, ரெயின் கோட்டை மாணவர்கள் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
News January 11, 2026
‘ஆட்சியில் பங்கு’ மவுனமாக சென்ற செல்வபெருந்தகை

‘ஆட்சியில் பங்கு’ என மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கு ‘ஆட்சியில் பங்கு’ கிடையாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக அமைச்சர் <<18826821>>ஐ.பெரியசாமி<<>> பதிலடி கொடுத்தார். இந்நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த செல்வபெருந்தகை, ஐ.பெரியசாமிக்கு கருத்து குறித்து பதிலளிக்காமல் சென்றார்.
News January 11, 2026
நிர்வாக தோல்வியை மறைக்கும் திமுக அரசு: அண்ணாமலை

அமைதி வழியில் போராடும் இடைநிலை ஆசியர்களை தினந்தோறும் கைது செய்து, திமுக அரசு தனது சர்வாதிகார முகத்தை காட்டுவதாக அண்ணாமலை சாடியுள்ளார். தனது X பதிவில் அவர், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத CM ஸ்டாலின், நிர்வாக தோல்வியை மறைக்க ஆசியர்கள் மீது போலீஸை ஏவுவதாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, கைதான ஆசிரியர் சங்கத்தின் 7 நிர்வாகிகளை விடுவிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


