News March 26, 2025
சர்ச்சைக்குரிய தீர்ப்பு: மேல் விசாரணைக்கு எடுத்த SC

பெண்ணின் மார்பைப் பிடிப்பதோ, ஆடையை கிழிப்பதோ பாலியல் வன்கொடுமை அல்ல என சிறார் பாலியல் தாக்குதல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
Similar News
News December 24, 2025
அனைத்து மகளிருக்கும் ₹50,000.. அதிரடி அறிவிப்பு

புதுச்சேரியில் பெரிய கட்சிகள் வியக்கும் அளவுக்கு, ஜோஸ் சார்லஸின் LJK தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு ₹35,000 நிதி உதவியும், குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ₹20,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ₹50,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
News December 24, 2025
நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் ரஷ்யா!

2036-ம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையத்தை கட்டமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. நிலவில் நீண்டகால ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும், ரஷ்யா – சீனா கூட்டு ஆய்வு மையத்தை நிறுவுவதற்கும் தேவைப்படும் மின்சாரத்தை, அங்கு அமைக்கும் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. விண்வெளி ஆய்வில் US-ஐ விட ரஷ்யா பின்தங்கி வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
News December 24, 2025
4 குழந்தைகள் பெற வேண்டும்: பாஜக MP நவ்நீத் ராணா

இந்துக்களாகிய நாம் குறைந்தது 3-4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக MP நவ்நீத் ராணா கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு மௌலானா தனக்கு 4 மனைவிகள், 19 குழந்தைகள் இருப்பதாக ஓப்பனாக பேசினார். அதிக குழந்தைகள் பெற்றெடுப்பதன் மூலம் அவர்கள் இந்தியாவை பாகிஸ்தானாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அப்படியென்றால் இந்துக்களாகிய நாம் ஏன் ஒரே குழந்தையுடன் திருப்தி அடைய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.


