News March 26, 2025
சர்ச்சைக்குரிய தீர்ப்பு: மேல் விசாரணைக்கு எடுத்த SC

பெண்ணின் மார்பைப் பிடிப்பதோ, ஆடையை கிழிப்பதோ பாலியல் வன்கொடுமை அல்ல என சிறார் பாலியல் தாக்குதல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
Similar News
News October 15, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹94,880-க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ₹11,860-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹1,960, இன்று ₹280 என 2 நாள்களில் ₹2240 உயர்ந்துள்ளது. விலையை குறைக்கும் நடவடிக்கையாக, தங்கத்திற்கான இறக்குமதி & GST வரியை குறைக்க வேண்டும் என நகை பிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
News October 15, 2025
கருப்பு பட்டையுடன் வந்த அதிமுக MLA-க்கள்

அதிமுக MLA-க்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து சட்டப் பேரவைக்கு வந்துள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பாக அவர்கள் இவ்வாறு வந்துள்ளனர். மேலும், கரூர் விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அரசியல் கூட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாம்.
News October 15, 2025
காங்.,க்கு எதிராக உதயநிதி ஆதரவாளர்கள் போர்க்கொடி

கரூருக்கு வந்த உதயநிதி, உடனடியாக துபாய்க்கு சென்றது ஏன் என திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியிருந்தார். காங்., மூத்த நிர்வாகியின் இந்த பேச்சுக்கு, ‘ராஜீவ் கொலையில் கூட்டு சதி செய்த துரோகியே, நாவை அடக்கி பேசு’ என உதயநிதி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கு, ‘திமுக, காங்., ஆதரவு இல்லாமல் தனித்து சாதிக்க முடியாது’ என வேலுசாமி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதனால் கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது.