News March 26, 2025

சர்ச்சைக்குரிய தீர்ப்பு: மேல் விசாரணைக்கு எடுத்த SC

image

பெண்ணின் மார்பைப் பிடிப்பதோ, ஆடையை கிழிப்பதோ பாலியல் வன்கொடுமை அல்ல என சிறார் பாலியல் தாக்குதல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

Similar News

News November 27, 2025

நடிகர் ஜெயராம் கைது செய்யப்படுகிறாரா?

image

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் <<18367317>>ஜெயராம்<<>> முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், டிசம்பரில் நடைபெறும் கேரள உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துவார பாலகர் சிலைகள், சபரிமலை கோயில் கதவு நிலைகளை வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவகாரத்தில் ஜெயராமை கைது செய்ய, SIT முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 27, 2025

7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

image

தென்மேற்கு வங்க கடலில் <<18399959>>காற்றழுத்த தாழ்வு மண்டலம்<<>> உருவான நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற IMD அறிவுறுத்தியுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 50- 60 கி.மீ., வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது.

News November 27, 2025

செங்கோட்டையனை தொடர்ந்து தங்கமணி விலகலா?

image

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில், வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், EX மினிஸ்டர் தங்கமணி, இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளாராம். இதனால், செங்கோட்டையனை போலவே, தங்கமணியும் அதிமுகவில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் உண்மை தெரியவரும்.

error: Content is protected !!