News April 12, 2025
சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் பொன்முடி

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார். தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி தாம் பேசிய பேச்சுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியுள்ளார். தபெதிக விழாவில் பேசியபோது பெண்கள், சைவம், வைணவம் குறித்த அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கனிமொழி உள்ளிட்டாேர் கண்டனம் தெரிவித்ததால், திமுகவில் அவரது பதவி பறிக்கப்பட்டது.
Similar News
News November 25, 2025
ராஜன் போன்ற கேரக்டரில் நடிக்கவுள்ளாரா VJS?

அரசன் படத்திற்கு அதிபயங்கர எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குறிப்பாக யார் யார் இப்படத்தில் நடிக்கப் போகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில், அவர்களின் பசிக்கு தீனி போடும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. ‘வடசென்னையின் ராஜன்’ போல இவரது கேரக்டரும் நின்றுபேசும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
News November 25, 2025
வங்கக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள்!

குமரிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானதாக IMD தெரிவித்துள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், தெற்கு வங்கக்கடலில் நாளை ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ளது. ஒரே நேரத்தில் 2 புயல்களால் கனமழை வெளுக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
News November 25, 2025
60 KM., வேகத்துக்கு மேல் பஸ் சென்றால் நடவடிக்கை: KKSSR

<<18374035>>தென்காசியில்<<>> விபத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பஸ்களின் பர்மிட்டை கேன்சல் செய்திருப்பதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். தனியார் பஸ்கள் இனி 60 கி.மீ., வேகத்துக்கு மேல் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான கருவி பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனிக்க RTO-க்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


