News April 28, 2024

ராகுல் குறித்து சர்ச்சைக் கருத்து, எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

image

ராகுல் தொடர்பாக சர்ச்சைக் கருத்து தெரிவித்த கேரள சிபிஎம் எம்எல்ஏ அன்வர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. காந்தியின் பெயரை ராகுல் பயன்படுத்தக்கூடாது என்ற அன்வர், ராகுலின் டிஎன்ஏவை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 14, 2025

BREAKING: திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளுக்கும்…

image

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். காரைக்குடியில் முதல்கட்டமாக 1,448 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை அவர் வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் ₹248 கோடி மதிப்பில் 5,34,017 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தற்போது, வார விடுமுறை என்பதால் வரும் திங்கள்கிழமை முதல் சைக்கிள் விநியோகம் செய்யும் பணி தொடங்கும்.

News November 14, 2025

நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: PM மோடி

image

பிஹார் தேர்தல் வெற்றி நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு கிடைத்தது என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மக்களுக்கு தனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களின் தீர்ப்பு மேலும் உறுதியாக சேவையாற்ற உந்துதல் தரும் எனவும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி முன்னிலை உள்ளது.

News November 14, 2025

பிஹார் வெற்றி தமிழகத்திலும் தொடரும்: நயினார்

image

பிஹார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் தொடரும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வெற்றிக்கு ECI உதவியதாக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றால் அமைதியாக இருக்கும் காங்., தோல்வியடைந்தால் மட்டும் ECI-யை குற்றம்சாட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!