News April 28, 2024
ராகுல் குறித்து சர்ச்சைக் கருத்து, எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

ராகுல் தொடர்பாக சர்ச்சைக் கருத்து தெரிவித்த கேரள சிபிஎம் எம்எல்ஏ அன்வர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. காந்தியின் பெயரை ராகுல் பயன்படுத்தக்கூடாது என்ற அன்வர், ராகுலின் டிஎன்ஏவை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 19, 2025
Robo Shankar-ன் நிலைமை வராமல் இருக்க இத கவனியுங்க

மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு தோல், கண்கள் & உடலின் சில பகுதிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதற்கு ‘பிலிருபின்’ தான் காரணம். பிலிருபின் என்பது சிவப்பு ரத்த அணுக்கள் உடையும்போது உற்பத்தியாகும் ஒரு மஞ்சள் நிறமி. 3 காரணங்களால் இது வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. ➤கல்லீரல் நோய் ➤பித்த நீர் அடைப்பு ➤ரத்த சிவப்பணுக்கள் அதிக அளவில் சிதைவது. இதில் ரோபோ சங்கரை பாதித்தது கல்லீரல் நோய்தான்.
News September 19, 2025
RECIPE: ஹெல்தியான பச்சை பயறு புலாவ்!

*குக்கரில் நெய் விட்டு, மிதமான தீயில் கசகசா, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலாப் பொருள்களை சேர்த்து வதக்கவும் *பிறகு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், எலுமிச்சை சாறு சேர்க்கவும் *இதில், தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து, அரிசி- பச்சைப்பயறு கலவையை சேர்த்து 3 விசில் வரை காத்திருந்தால், சுவையான பச்சைப்பயறு புலாவ் ரெடி. SHARE IT.
News September 19, 2025
நான் டிரம்பின் ஆதரவாளர் அல்ல: போப் லியோ

தான் டிரம்பின் ஆதரவாளர் அல்ல என போப் லியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசியலில் தலையிட விரும்பவில்லை என்ற அவர், அதேநேரம் அங்கு நிலவும் புலம் பெயர்ந்தோர் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார். இதுவரை தான் டிரம்பிடம் பேசவில்லை என கூறிய போப், அவரின் கொள்கை முடிவுகளில் மாறுபட்ட கருத்த உள்ளதாகவும் தனது முதல் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.