News June 26, 2024
தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது, அவரது சம்பளத்திலிருந்து 10%, அரசு பங்களிப்பாக 10%, மேலும் இந்தத் தொகைகளுக்கான வட்டி 7-8% என ஓய்வூதிய தொகையாகச் சேகரிக்கப்படும். ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை அப்படியே திருப்பித் தரப்படும். தமிழ்நாட்டில் உள்ள இத்திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
Similar News
News November 22, 2025
ச்சீ! கட்சி பெயரை கூட திருடி வைத்துள்ளார்கள்: துரை

2024-ல் கே.பி.சரவணன் என்பவர் தொடங்கிய ‘திராவிட வெற்றிக்கழகம்’ பெயரில், மல்லை சத்யாவும் புதிய கட்சியை தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு துரை வைகோ, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை; ஆரம்பிக்கும் போதே திருட்டுப் பழக்கத்தில் ஆரம்பித்தால் கடைசி வரை திருட்டுப் பழக்கம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் கட்சி பெயரைக்கூட இன்னொரு கட்சியிடம் களவாடி வைத்துள்ளனர் என காட்டமாக விமர்சித்தார்.
News November 22, 2025
காலையிலேயே பரபரப்பான சென்னை.. துப்பாக்கிச்சூடு

சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே நண்பர்களுடன் பதுங்கியிருந்த விஜயகுமாரை கைது செய்ய சென்றபோது, போலீசாரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து தற்காப்புக்காக விஜயகுமாரை காலில் சுட்டுப்பிடித்த போலீசார், அவரின் கூட்டணியான கவுதம், நிரஞ்சன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
News November 22, 2025
திடீரென மனம் மாறிய டிரம்ப்!

நியூயார்க் மேயர் <<18203048>>மம்தானிக்கும்<<>>, டிரம்ப்புக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துக்கொண்டனர். இச்சந்திப்பை அடுத்து, நியூயார்க் வளர்ச்சிக்கும் தேவையானவை செய்து தரப்படும் எனவும், மம்தானி சிறந்த மேயராக இருப்பார் எனவும் டிரம்ப் புகழ்ந்துள்ளார். நேற்று வரை எதிரும் புதிருமாய் இருந்த இவர்கள் இப்படி இணக்கம் காட்டுவது எப்படி என மக்கள் கேட்கின்றனர்.


