News June 26, 2024
தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது, அவரது சம்பளத்திலிருந்து 10%, அரசு பங்களிப்பாக 10%, மேலும் இந்தத் தொகைகளுக்கான வட்டி 7-8% என ஓய்வூதிய தொகையாகச் சேகரிக்கப்படும். ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை அப்படியே திருப்பித் தரப்படும். தமிழ்நாட்டில் உள்ள இத்திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
Similar News
News December 13, 2025
பாமகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக

ராமதாஸ், அன்புமணி என 2 தரப்புகளிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது. பாமக வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்க, இருவரையும் சமாதானப்படுத்தி ஒரே சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக விரும்புகிறதாம். இதற்காக இருதரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 50%-ஐ ராமதாஸ் கேட்கும் நிலையில், 75%-ஐ கேட்டு அன்புமணி முரண்டு பிடிக்கிறாராம்.
News December 13, 2025
கேரளாவில் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் இடையே இழுபறி!

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி(LDF), கேரளா ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF) இடையே கடும் போட்டி நிலவுகிறது. காலை 9 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் LDF 3 இடங்களிலும், UDF 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 87 நகராட்சிகளில் UDF-45, LDF-32, NDA-2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
News December 13, 2025
டெல்லி விரைந்த நயினார்.. மீண்டும் இணைகிறாரா OPS?

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நயினார் சற்றுமுன் டெல்லி புறப்பட்டு சென்றார். டிச.15-ம் தேதி சென்னை வரும் அமித்ஷா முன்னிலையில், TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, நேற்று முன்தினம் EPS உடன் நயினார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்க இன்று டெல்லி விரைந்துள்ளார்.


