News June 26, 2024

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

image

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது, அவரது சம்பளத்திலிருந்து 10%, அரசு பங்களிப்பாக 10%, மேலும் இந்தத் தொகைகளுக்கான வட்டி 7-8% என ஓய்வூதிய தொகையாகச் சேகரிக்கப்படும். ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை அப்படியே திருப்பித் தரப்படும். தமிழ்நாட்டில் உள்ள இத்திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

Similar News

News September 17, 2025

படி ஏறவே மூச்சுத்திணறும் ‘மின்னல் மேன்’

image

ஒரு காலத்தில் 100 மீட்டரை 9.58 செகண்டில் ஓடிய உலகின் மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட், தற்போது மாடிப் படி ஏறவே தான் சிரமப்படுவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 2017-ல் ஓய்வு பெற்றபின், டிவி பார்ப்பது, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது என லைஃப்ஸ்டைல் மாறிவிட்டதால், உடற்பயிற்சி செய்வது குறைந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், மீண்டும் ஓட்டப்பயிற்சி செய்ய வேண்டும் என நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

News September 17, 2025

சோக மரணம்.. உதயநிதி நேரில் அஞ்சலி

image

கரூரில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், கட்சியின் முன்னோடி உறுப்பினரான குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விருதை பெறும் முன்னரே உடல் நலக் குறைவால் அவர் மறைந்தது கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரது வீட்டிற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், சிவராமன் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

News September 17, 2025

டிகிரி போதும்.. மத்திய அரசில் ₹47,600 சம்பளத்தில் வேலை!

image

Union Public Service Commission-ல் காலியாக உள்ள 213 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைக்கேற்ப டிகிரி, சட்டத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும். சம்பள விகிதம்:₹47,600 முதல் ₹1,18,500 வரை. இதற்கு வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்கள்.

error: Content is protected !!