News June 26, 2024
தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது, அவரது சம்பளத்திலிருந்து 10%, அரசு பங்களிப்பாக 10%, மேலும் இந்தத் தொகைகளுக்கான வட்டி 7-8% என ஓய்வூதிய தொகையாகச் சேகரிக்கப்படும். ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை அப்படியே திருப்பித் தரப்படும். தமிழ்நாட்டில் உள்ள இத்திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
Similar News
News December 6, 2025
BREAKING: ஒரே நாளில் ₹25,000 வரை விலை உயர்ந்தது

நாடு முழுதும் <<18486693>>விமான டிக்கெட்களின்<<>> கட்டணம் நிர்ணயம் செய்தும் விலை குறையவில்லை. மாறாக பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – கோவைக்கு வழக்கமாக ₹5,400 ஆக இருக்கும் நிலையில், இன்று ₹57,700, நாளை ₹71,000 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை – பெங்களூருக்கு ₹24,000 – ₹59,000 வரை அதிகரித்துள்ளது. சென்னை – திருச்சிக்கு ₹4,000 – ₹26,000, சென்னை – டெல்லிக்கு ₹24,000 – ₹42,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
வேலை நேரம் முடிந்த பிறகும் வேலை செய்ய சொன்னால்..?

வேலை நேரம் முடிந்த பிறகும், Client உடன் பேசுங்கள், இந்த Task-ஐ செய்யுங்கள் என TL, மேனஜர்களிடம் இருந்து ஊழியர்களுக்கு அழைப்புகள் வருவது வழக்கம். இதுபோன்று வரும் இ-மெயில்கள், அழைப்புகளை துண்டிக்கும் உரிமையை ஊழியர்களுக்கு வழங்கும் வகையில், NCP MP சுப்ரியா சுலே லோக்சபாவில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் சட்டமாகும். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமா?
News December 6, 2025
விஜய் பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.


