News June 26, 2024

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

image

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது, அவரது சம்பளத்திலிருந்து 10%, அரசு பங்களிப்பாக 10%, மேலும் இந்தத் தொகைகளுக்கான வட்டி 7-8% என ஓய்வூதிய தொகையாகச் சேகரிக்கப்படும். ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை அப்படியே திருப்பித் தரப்படும். தமிழ்நாட்டில் உள்ள இத்திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

Similar News

News November 9, 2025

சற்றுமுன்: பிதாமகன் காலமானார்

image

இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியின் ‘பிதாமகன்’ என போற்றப்படும் மூத்த பேராசிரியர் V.ராஜாராமன்(92) காலமானார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, IISc உள்ளிட்டவைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். TCS-ன் முதல் CEO ஃபக்கீர் சந்த் கோஹ்லி, Infosys நிறுவனர் NR நாராயண மூர்த்தி ஆகியோர் இவரது மாணவர்கள்தான். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 1998-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்திருந்தது.

News November 9, 2025

இரவில் இருமல் வந்தால்… டிப்ஸ்

image

இரவு நேரங்களில் திடீரென தொண்டை அடைப்பது போல இருமல் இருக்கிறதா? பதறாதீர்கள். இது தொண்டை அழற்சியால் ஏற்படலாம். உடனடியாக பாலை சூடு செய்து அதில் சிறிது மஞ்சள் பொடி கலந்து குடியுங்கள். மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி பாக்டீரியல் தொண்டை அழற்சியை உடனடியாக குணப்படுத்திவிடும். பாலில் மஞ்சள்தூள் கலந்து குடிக்க விரும்பாதவர்கள் அதில் ஒரு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம்.

News November 9, 2025

BREAKING: நாளை முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது

image

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு (கேரளா, ஆந்திரா , கர்நாடகா, புதுச்சேரி) நாளை முதல் பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்படி, அண்டை மாநில பஸ்களுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!