News October 15, 2025
முதல்வர், ஏடிஜிபி தகவலில் முரண்: இபிஎஸ்

கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு தொடர்பாக CM மற்றும் ஏடிஜிபி அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக EPS விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், 600 போலீசார் பாதுகாப்பில் இருந்ததாக CM கூறுவதாகவும் ஆனால் ஏடிஜிபியோ 500 போலீசார் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். TVK கேட்ட இடத்தை அளித்திருந்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
BREAKING: தவெக நிர்வாகிகளுக்கு ஜாமின்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இருவரும் கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ளனர். இதில், மதியழகனை, நீதிமன்ற அனுமதி பெற்று SIT குழு 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 15, 2025
கட்சியில் இணைந்தவுடன் பாடகிக்கு ஜாக்பாட்

பிஹார் சட்டமன்ற தேர்தலுக்கான, 12 பேர் கொண்ட 2-வது வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நேற்று கட்சியில் இணைந்த பிரபல பாடகி மைதிலி தாகூர், அலிநகர் தொகுதியில் பேட்டியிட உள்ளார். அதேபோல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ரா, பக்சர் தொகுதியில் போட்டியிடுகிறார். 71 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் நேற்று வெளியானது. பிஹாரில் கூட்டணி ஒப்பந்தத்தின்படி 101 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றது.
News October 15, 2025
இந்த தீபாவளியில் இவர்களை கொஞ்சம் கவனியுங்க!

நம்மில் பலருக்கும் தீபாவளி ஒரு கொண்டாட்டம். ஆனால், இவர்களை போன்றவர்களுக்கு அதுவும் ஒரு போராட்டம். நம்மை நம்பி, ரோட்டில் கடை போட்டு, ஒரு நாளாவது நிம்மதியாக சாப்பிட்டு, தூங்கி விட மாட்டோமா என ஏக்கத்தில் இருப்பவர்களை, நாம்தானே ஆதரிக்க வேண்டும். இந்த பதிவை ஷேர் பண்ணுங்க. அதே போல, ஷேர் மட்டும் பண்ணாமல், நீங்களும் இது போன்ற ஒரு கடையில் ஏதாவது ஒரு பொருளை வாங்குங்க. சிறு துளி பெருவெள்ளம் அல்லவா.